25 ஜூலை 2016

ஜெர்மனியில் மீண்டும் தாக்குதல்!

ஜெர்மனியில் இசை விழா ஒன்று நடந்த இடத்துக்கு வெளியே குண்டை வெடிக்கச் செய்த சிரியாக்காரர் பல்கேரியாவுக்கு நாடுகடத்தப்படவிருந்தவர் என்று ஜெர்மனி கூறுகின்றது.
தற்கொலை செய்துகொண்ட தாக்குதலாளி பன்னிரெண்டு பேரை காயமடையச் செய்துள்ளார்.
இந்த குண்டு வெடிப்பு தெற்கு மாநிலமானபவாரியாவில் அன்ஸ்பக் நகரில் நடந்துள்ளது.
இசை விழா நடந்த அரங்குக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து தாக்குதலாளி தனது முதுகுப் பையில் இருந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.
ஜெர்மனியின் தெற்கு நகரான அன்ஸ்பர்க்கில் இசை திருவிழா ஒன்றில் 15 பேரை காயமடையச் செய்த தாக்குதலுக்கு, தீவிரவாத அமைப்பான இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
தாக்குதல்தாரி தயாரித்த கைபேசி வீடியோவில், ஐ .எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பகாடியிடம் தாக்குதல் தாரி தனது விசுவாசத்தை காண்பிப்பதாக தெரிகிறது என பவேரியன் போலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மன் நாட்டின் தெற்கு பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தஞ்சம் மறுக்கப்பட்ட சிரியா நாட்டு நபர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து, பொது இடங்களில் போலிஸ் பாதுகாப்பை அதிகரிக்க ஜெர்மன் உள்துறை அமைச்சர் தாமஸ் டி மைசிரி உத்தரவிட்டுள்ளார்.
தாக்குதல்தாரி இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜெர்மன் வந்ததாகவும், அங்கு தஞ்சம் மறுக்கப்பட்டதால் பல்கேரியாவிற்கு செல்ல இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

நன்றி:பிபிசி தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக