29 ஜூலை 2016

தஞ்சம் கோருபவர்களை வரவேற்கும் முடிவில் மாற்றமில்லை-அங்கெலா மெர்கல்

ஜெர்மனியில் சமீபத்தில் தஞ்சம் கோரி வந்தவர்கள் தாக்குதல் நடத்திய நிலையில்,தஞ்சம் கோருபவர்களை வரவேற்கும் தன்னுடைய கொள்கையை கைவிட முடியாது என ஜெர்மன் அதிபர் அங்கெலா மெர்கல் கூறியுள்ளார்.
ஜெர்மனியில் குடியேறிகளாக வந்த இருவர், இஸ்லாமிய அரசு என அழைத்துக் கொள்ளும் அமைப்பின் பெயரில் தாக்குதல் ஒன்றை நடத்தியதன் மூலம், அவர்களுக்கு ஆதரவளித்த நாட்டை கேலி செய்துள்ளனர் என்று அங்கெலா மெர்கல் கூறியுள்ளார்.
ஜெர்மனியில் பாதுகாப்பை உறுதிசெய்ய தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாக கூறியுள்ளார்.
ஆனால்,ஜெர்மனியின் வெளிப்படையான கலச்சாரத்தை தீவிரவாதிகள் குறைத்து மதிப்பீடு செய்வதை அனுமதிக்க முடியாது என அவர் மேலும்தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக