18 ஜனவரி 2018

தேர்தல் நேரத்தில் சம்பந்தர் இப்படித்தான் பேசுவார்!

நாம் தற்­போது நிதா­ன­மாக, நியா­ய­மாக, நேர்­மை­யாக ஒருமித்த நாட்­டுக்­குள் மதிப்­பைப் பெற்­றுக்கொள்ள முயற்­சிக்­கின்றோம். அது நடை­பெ­றா ­விட்­டால் எமது சம்­ம­தம் இல்­லா­மல் நடை­பெ­றும் ஆட்­சியை மாற்ற வேண்­டிய நிலை ஏற்­ப­டும் என்று எதிர்க்கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் எச்­ச­ரித்­துள்­ளார்.திரு­கோ­ண­ம­லை­ நக­ர­ச­பை­யில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பின் கீழ் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து நேற்று நடத்­தப்­பட்ட மக்­கள் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.வடக்கு, கிழக்­கில் உள்ள மக்­கள் ஒருமித்து நிற்­கின்­றார்­களா என்­ப­தைப் பன்­னாட்டு ரீதி­யில் இந்த தேர்­தலை பலர் உற்று நோக்­கு­கின்­ற­னர். தமிழ் மக்­கள் மிக நீண்ட கால­மாக போராடி வரு­கின்­றார்­கள். ஐக்­கிய நாடு­கள் சபை­யின் அடிப்­படை பிர­க­டத்­தின் படி ஒரு மக்­களை அவர்­க­ளின் சம்­ம­தம் இல்­லா­மல் ஆட்சி புரிய முடி­யாது. எமக்கு சுயாட்சி உரித்து உண்டு. அந்த உரிமை மதிக்­கப்­பட வேண்­டும். நாம் தற்­போது நிதா­ன­மாக, நியா­ய­மாக, நேர்­மை­யாக ஒரு­மித்த நாட்­டுக்­குள் நியா­ய­மான மதிப்­பைப் பெற்­றுக் கொள்ள முயற்­சிக்­கின்­றோம். அது நடை­பெறா விட்­டால் எமது சம்­ம­தம் இல்­லா­மல் நடை­பெ­றும் ஆட்­சியை மாற்ற வேண்­டிய நிலை ஏற்­ப­டும்.நாங்­கள் இன்று அர­சுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­கின்­றோம் என்­றும், மக்­க­ளு­டைய பல கரு­மங்­களை தீவி­ர­மாக கையா­ள­வில்லை என்­றும் எம்­மீது குற்­றம் சாட்ட சிலர் முயற்­சிக்­கி­றார்­கள். அது தவறு நாங்­கள் அர­சின் பங்­கா­ளி­கள் அல்ல. நாங்­கள் அர­சின் அமைச்­சர்­க­ளும் அல்ல. எமது பிரச்­சினை தீரும் வரை அமைச்­சர்­க­ளாக வர­மாட்­டோம். எமது மக்­கள் தமது உள்­ளக சுய­நிர்­ணய உரி­மை­யின் அடிப்­ப­டை­யில் அவர்­கள் வாழ்­கின்ற பிர­தே­சங்­க­ளில் அவர்­க­ளு­டைய கரு­மங்­களை அவர்­களே கையா­ளக் கூடிய நிலை ஏற்­ப­டும் வரை நாம் அமைச்­சுப் பத­வி­களை ஏற்க மாட்­டோம்.நாட்­டில் ஒரு கொடு­ர­மான ஆட்சி நடை­பெற்­றது.அதை எமது மக்­க­ளின் வாக்­குப் பலத்­தால் நாம் மாற்­றி­னோம் அதன் நிமித்­தம் எமது மக்­க­ளின் காணிப் பிரச்­சினை காணா­மல் போனோர் பிரச்­சினை தொடர்­பான விட­யங்­க­ளுக்கு தீர்வு பெற்று வரு­கின்­றோம் என்­றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக