இருபாலை பகுதியில் மாணவர்களை முன்பள்ளிக்குள் வைத்து பூட்டி விட்டுச் சென்ற முன்பள்ளி ஆசிரியை தொடர்பான தகவல் வெளியானதை அடுத்து கல்வி திணைக்கள அதிகாரிகளால் குறித்த முன்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.இருபாலை தெற்கு ஞான ஒளி சனசமூக நிலையத்தில் இயங்கி வந்த குறித்த முன்பள்ளியில் மாணவர்கள் கற்று கொண்டு இருந்த நேரம் திடீரென ஆசிரியை மாணவர்களை முன்பள்ளிக்குள் வைத்து பூட்டி விட்டு வெளியில் சென்று விட்டார்.மூடப்பட்ட முன்பள்ளிக்குள் மாணவர்கள் தனித்து இருந்தபோது, அச்சம் காரணமாக அவலக்குரல் எழுப்பினர்.அதனை அவதானித்த அயலவர்கள் முன்பள்ளி ஆசிரியையின் பொறுப்பற்ற தன்மையை கண்டித்ததுடன் மாணவர்களை மீட்கும் முகமாக ஆசிரியையை தேடி சென்றுள்ளனர்.சம்பவம் தொடர்பில் கல்வி திணைக்கள அதிகாரிகளுக்கும் அயலவர்கள் தகவல் தெரிவித்தனர். அதனை அடுத்து குறித்த முன்பள்ளிக்கு விரைந்த அதிகாரிகள் மாணவர்களை மீட்டதுடன், விசாரணைகளையும் மேற்கொண்டனர். அத்துடன் தற்காலிகமாக முன்பள்ளியை மூடுமாறு பணித்துள்ளனர்.
குறித்த முன்பள்ளியின் ஆசிரியை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் என்று தெரிவிக்கப்படுகிறது.
குறித்த முன்பள்ளியின் ஆசிரியை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் என்று தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக