18 மே 2018

நாரந்தனையில் தொடரும் பசுக்கொலைகள்!

2018-05-18 நாரந்தனை வடக்கில் தொடரும் பசுவதைகள்! முள்ளிவாய்க்கால் மனிதப்படுகொலை நினைவுநாளான இன்று கோமாதா என அழைக்கப்படும் பசுவைக் கொன்று இறைச்சியாக்கும் ஈனச்செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.கட்டாக்
காலிகள் அழிக்கப்படவேண்டும் என கடந்தகாலங்களில் கோஷமிட்ட சிலர் இந்த பசுக்கொலைக்கு ஆசீர்வாதம் வழங்குவதாக அறியப்பட்டுள்ளது.கோயில் திருவிழாவுக்கு பால் கொண்டுவா, தயிர் கொண்டுவா என விளம்பரம் விடும் கோயில் நிர்வாகிகள் பசுக் கொலையைக்கண்டிப்பதில்லை. மனச்சாட்சி இருந்தால் இதைக் கண்டிக்கலாமே!
பொது அமைப்புகள் எவையும் கண்டிப்பதாகத் தெரியவில்லை.
என்னினமே! என் சனமே! எமக்கேன் இந்த ஈன நிலை?
ஒவ்வொரு நாளும் கொலைசெய்யப்பட்டு இறைச்சிவாரப்பட்டுக் கிடக்கும் பசுக்களின் உடலைத் தரிசனம் செய்வது தான் எமது தலைவிதியா? சைவசமயிகள் என்று பட்டை அடித்துக்கொண்டு திரிய வெட்கம் இல்லையா? நாரந்தனைக் கந்தசாமி கோயில் திருவிழா நாளை ஆரம்பமாம்! 12 நாளும் தவறாமல் செல்லுங்கள்! மாடுகள் செத்தால் உங்களுக்கென்ன? நீங்கள் எல்லாம் சைவசமயிகள் அல்லவா?
யாராவது கேணைப்பயல்கள் மாடுகளைப்பற்றி விசனப்படட்டும்!

நன்றி:முன்னாள் அதிபர் திரு,ஞானசோதியன்(முகநூல்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக