01 மே 2018

புலிகள் இயக்கப் போராளி பிரதீபனுக்கு மக்கள் இறுதி அஞ்சலி!

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளி பிரதீபனின் இறுதிக்கிரியைகள் நேற்று மதியம் முல்லைத்தீவு முத்தையன்கட்டிலுள்ள அவரது வீட்டில் இடம்பெற்றது. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் விக்ரர் கவச எதிர்ப்பு படையணியில் பணியாற்றிய ஒட்டுச்சுட்டான் பகுதியைச் சேர்ந்த  போராளி பிரதீபன் நேற்றுமுன்தினம் உயிரிழந்திருந்தார்.உயிரிழந்த போராளியின் இறுதி வணக்கக் கூட்டம் முத்தையன்கட்டு இளந்தளிர் கல்வி நிலையத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. அவரது இறுதி வணக்க ஊர்வலமும் மிகவும் உணர்வெழச்சியுடன் நடத்தப்பட்டுள்ளது. இந்த இறுதி நிகழ்வின்போது பெருந்திரளான பொதுமக்கள்,மற்றும் போராளிகள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக