27 மே 2018

பசுவதை தொடர்பில் மறவன்புலவு சச்சிதானந்தம் காட்டம்!


இலங்கை இந்து மற்றும் பௌத்த பூமியாக இருக்கிறது. வேறெந்த மக்களுக்கும் சொந்தமானது அல்ல என சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.பசுக்கள் மீதான வதைகளை எதிர்த்து இந்து பௌத்த மத தலைவர்களினால் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.இலங்கை இந்து மற்றும் பௌத்த பூமியாக இருக்கிறது. வேறெந்த மக்களுக்கும் சொந்தமானது அல்ல என சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.பசுக்கள் மீதான வதைகளை எதிர்த்து இந்து பௌத்த மத தலைவர்களினால் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இப் போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,“எங்கள் பகுதிகளுக்கு வந்தால் எங்கள் மரபுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். இலங்கையானது இந்து மற்றும் பௌத்த பூமியாக இருக்கிறது. வேறெந்த மக்களுக்கும் சொந்தமானது அல்ல. எங்களுக்குரிய பண்பாட்டு மரபிருக்கிறது.எமது பகுதிகளுக்கு வந்தால் எங்கள் மரபுகளோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள். அப்படியில்லையாயின் அவுஸ்திரேலியப் பிரதமர் சொல்லவதைப் போல உங்கள் நாட்டுக்கே போய் விடுங்கள்.
இந்த மண் புனிதமான மண். பசுக்களைப் பேணுவதால் அது புனிதமானது. எமது புனிதமான மண்ணைக் கெடுக்காதீர்கள்.எப்படி ஒரு ஆணை, பெண்ணை, குழந்தையை கொல்வது கொடுமையோ அவ்வாறே பசுவைக் கொல்வதும் கொடுமையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக