03 நவம்பர் 2016

போராளி ஒருவர் திடீர் மரணம்!

வவுனியா- பனிக்கநீராவி புளியங்குளம் பகுதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி ஒருவர் நேற்று திடீரென மயங்கி வீழ்ந்து மரணமானார். புளியங்குளம் பகுதியை சேர்ந்த அமலதாஸ் (வயது-46) என்ற முன்னாள் போராளியே மரணமானவராவார்.நேற்றைய தினம் உறவினர்களுடன் வெளியில் சென்று விட்டு மதியம் மூன்று மணியளவில் வீடு திரும்பிய இவர் ஓய்வு எடுப்பதற்காக உறங்கச் சென்ற வேளை திடீரென மயங்கி கீழே விழுந்தார். மயக்கத்துடன் தான் இருக்கின்றார் என்று நினைத்து குடும்பத்தினர் அவரை புளியங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே மரணமாகி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இவரது மரணம் குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள உறவினர்கள், இதுவரை அவர் நல்ல ஆரோக்கியமாகவே காணப்பட்டார் என்றும் தெரிவித்தனர். அமலதாஸ் 2011.04.23 அன்று புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையானவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக