21 ஜனவரி 2017

உயிரையும் கொடுக்க தயார்-ஜனநாயக போராளிகள் கட்சி!

தமிழ் மக்களுக்காக உயிரையும் கொடுக்க எமது அணி தயாராக இருக்கின்றது என ஜனநாயகப் போராளிகளின் கட்சி செயலாளர் இரா. கதிர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு- கல்லடி வெய்ஸ் ஒப் மீடியா கற்கை நிலைய மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்-
”கடந்த கால கசப்பான அனுபவங்களை ஓர் படிப்பினையாக எடுத்துக்கொண்டு தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் நாம், சொகுசு வாகனங்களும் சுகபோக வாழ்க்கைக்கும் அடிமையானவர்களிடம் இனிமேலும் ஏமாறத் தயாரில்லை என்பதனை இடித்துரைக்க கடமைப்பட்டுள்ளோம். எம் அன்பு உறவுகளே நாம் ஒன்றிணைவோம். எம் தமிழ் இன துரோகிகளை வீட்டுக்கு அனுப்புவோம். உங்களுக்காக உயிரையும் கொடுக்க எமது அணி தயாராகவே உள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வித்துக்களை எம் மண்ணில் விதைத்துள்ளோம். இவ் விதைகள் துளிர்விடும் காலம் மலர்ந்துள்ளது. அதன் விழுதுகளாக நாமிருப்போம்.
நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தலாம். போராளிகள் என்பவர்கள் பெறுமதியானவர்கள். அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு இணக்கப்பாட்டடை ஏற்படுத்தி அதனூடாகத்தான் நிலையான சமாதானத்தை உருவாக்கவேண்டும். அதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு எங்களுடைய அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பாக அடுத்த கட்ட நகர்வை ஏற்படுத்துவோம்” என இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக