23 ஜனவரி 2017

வெட்ட வெளிச்சமான தமிழ்நாடு பொலிஸாரின் வன்முறை வெறியாட்டம்!

மிகவும் கேவலமான முறையில் தமிழ்நாடு பொலிஸ் நடந்துகொண்டிருக்கிறது.தமிழக மாணவர்களின் அமைதி வழிப்போராட்டம் உலகத்திற்கே அறப்போர் என்றால் இதுதான்
என்பதை உணர்த்தி தமிழ் மக்களுக்கு பெருமை சேர்த்திருக்கும் இத்தருணத்தில்,உலகிலேயே மிகவும் கேவலமான காவல்துறை தமிழக காவல்துறைதான் என்பதும் இன்றைய தினம் பதிவாகி இருக்கிறது.மக்கள் மீது கற்கள்,பொல்லுகள் கொண்டு தாக்குவதும்,வீடுகள்,கட்டிடங்கள்,வாகனங்கள் எரியூட்டப்படுவதும்,கர்ப்பிணிப்பெண்கள்,மூதாளர்கள் என்று கூட பாராமல் அவர்களையும் தாக்கி மிகவும் காட்டுமிராண்டி தனமாக நடந்து கொண்டிருக்கிறது தமிழ்நாடு பொலிஸ்.மாபெரும் வன்முறையை மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டு மாணவர்கள் மீது பழியைப்போட போட முற்பட்டு மானம்கெட்டுப் போய் நிற்கிறது தமிழ்நாடு பொலிஸ்.பொலிஸார் வன்முறையில் ஈடுபடும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் காணொளி ஆதாரங்களாக வெளியாகி உலகத்தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதாக புகைப்படம் வெளியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.இளம் பெண்கள்மீது பாலியல் வெறியாட்டங்களிலும் இந்த காடைக்கூட்டம் ஈடுபட்டதாக மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக