18 பிப்ரவரி 2018

நாமே ஆட்சி அமைப்போம் என்கிறார் மாவை!

மகிந்தவுடன் மாவை,சம்பந்தன்
யாழ்ப்பாண மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டிப் பிரதேச சபை ஆகியவற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஆட்சி அமைக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டிப் பிரதேச சபையில் ஆட்சி அமைப்பதற்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராஜா, “ நாம் தனித்து கூடிய ஆசனங்களைப் பெற்ற சபைகளின் தவிசாளர்கள், உப தவிசாளர்களை நியமிப்போம். அந்தச் சபைகளில் நாங்கள் ஆட்சி அமைப்போம். ஐக்கிய தேசியக் கட்சி, ஈ.பி.டி.பி. ஆகியன ஆட்சி அமைக்கும் கட்சிகளுக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்கும் என்று தெரிவித்துள்ளன. அவர்கள் ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் தெளிவான கருத்து இல்லை. இவ்வாறான நிலையில் இதற்குப் பதில் சொல்வது பொருத்தமாக இருக்காது எனவும் மாவை.சோ.சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக