08 பிப்ரவரி 2018

மூன்று பிள்ளைகளின் தந்தையான போராளி சாவடைந்துள்ளார்!

விசுவமடுவில் மூன்று பிள்ளைகளின் தந்தையான வீரப்பன் என்று அழைக்கப்படும் சந்திரச்செல்வன் என்ற முன்னாள் போராளியின் மரணம் அப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடிய இவர், தனது இரண்டு கால்களை இழந்ததுடன் தனது இரண்டு கைகளின் விரல்களையும் இழந்து கடும் காயத்திற்கு உள்ளாகியிருந்தார்.
விசுவமடுவில் வசித்து வந்த இவர் இன்று மரணமடைந்துள்ளார். நாட்டுக்காக போராட்டத்தில் இணைந்த சந்திரச்செல்வன் தனது உடல் அங்கங்களை இழந்து மிகுந்த வறிய நிலையில் வாழ்ந்து வந்தார். விசுவமடுவின் குமாரசாமிபுரம், புன்னை நீராவியில் வசித்து வந்த இவர் இன்று மரணமடைந்திருப்பது அப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக