20 ஜூன் 2013

சிவராமை கடத்தியவர்களை அடையாளம் காட்ட முடியும்!

தராகி சிவராம் 
கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான தர்மரட்ணம் சிவராமைக் கடத்திய நபர்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சிவராம் கொலை வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, அங்கு சாட்சியமளித்த கொழும்பு பாமன்கடை பகுதியைச் சேர்ந்த ரஞ்சன் பிரியந்த என்னும் ஆட்டோ ஓட்டுனரே இவ்வாறு கூறியுள்ளார்.
சிவராம் கடத்தப்பட்ட போது தான் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அருகே தனது வண்டியுடன் நின்றிருந்ததாகக் அவர் கூறினார்.
சாம்பல் நிற
ஜீப்பில் வந்த ஒரு குழுவே சிவராமைக் கடத்தியதாகவும், அவர்களை தான் தெளிவாகப் பார்த்ததாகவும், அவர்களை அடையாளம் காட்ட தன்னால் முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வழக்கு விசாரணை ஆகஸ்டு மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கு குறித்த சந்தேக நபரான ஆறுமுகம் சிறிஸ்கந்தராஜா என்னும் புளொட் அமைப்பின் அங்கத்தவர் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக