26 ஜூன் 2013

யாழ்,சிறுமியின் வாழ்வை சிதைத்த சிங்களன்!

யாழ்ப்பாணம் கைதடி சிறுவர் இல்லத்திலிருந்து தப்பியோடிய மூவரில் சிறுமி ஒருவர் களனியில் வீடொன்றில் வேலைக்காரியாக இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
15 வயதான குறித்த சிறுமி அந்த வீட்டில் வேலைக்கு அமர்த்தப்படுவதற்கு முன்னர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிலியந்தலை பிரதேசத்திலுள்ள இளைஞர் ஒருவர் இந்த சிறுமியை ஹோட்டலுக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதன் பின்னர் வீட்டுவேலைக்காக களனியிலுள்ள பெண்ணொருவரிடம் ஒப்படைத்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.
வீட்டு ஏஜமானி குறித்த சிறுமியிடம் தகவல்களை பெற்று கிளிநொச்சியிலுள்ள சிறுமியின் தந்தைக்கு இதுதொடர்பில் அறிவித்துள்ளார்.
தந்தையின் கோரிக்கைக்கு அமைவாக இந்த சிறுமியை எஜமானி உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சியை சேர்ந்த குறித்த சிறுமி ஏற்கனவே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் தடுப்புகாவல் உத்தரவிற்கு அமைய கைதடி சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
அங்கிருந்து 21 மற்றும் 22 வயது பெண்களுடன் இந்த சிறுமி மே மாதம் 24 ஆம் திகதி தப்பியோடியுள்ளார். அவர்கள் மூவரும் கொழும்பை நோக்கி பஸ்ஸில் வந்துக்கொண்டிருந்தபோது அதிலொரு யுவதி பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த சிங்களவரான ஆணொருவருடன் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளார்.
அவரின் கோரிக்கைக்கு அமைய மூவரும் பிலியந்தலைக்கு சென்று ஹோட்டலில் தங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சிறுமியை மட்டும் அங்கிருந்த இளைஞரிடம் கைவிட்டுவிட்டு இரண்டு யுவதிகளும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமியை சில நாட்கள் ஹோட்டலில் வைத்து துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன், அதற்கு பின்னர் களனியிலுள்ள பெண்ணொருவரிடம் சிறுமியை வீட்டுவேலைக்காக ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக