23 ஜூன் 2013

தன்னார்வ தொண்டர் கைதிற்கு ஜெர்மனி எதிர்ப்பு!

தமது நாட்டு தன்னார்வ தொண்டர் கைது செய்யப்பட்டமைக்கு ஜெர்மனிய அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையில் 30 ஆண்டுகளாக இயங்கி வந்த முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றின் தலைவர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
பிரிட்டிரிச் ஏபர்ட் அமைப்பின் இலங்கைக் கிளைப் பொறுப்பாளர் நோரா லங்கன்பார்சரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். கடந்த 13ம் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஜெர்மனியின் பேர்ளின் நகரில், அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் குய்டோ வெஸ்டர்வெல்லை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதே தினத்தில் நோராவை இலங்கை அதிகாரிகள் கைது செய்திருந்தனர். இந்த சம்பவத்திற்கு ஜெர்மனிய வெளிவிவகார அமைச்சர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனம் தனது பணிகளை தடையின்றி மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த கைதினைத் தொடர்ந்து குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. பணியாளர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள வழக்கு ஒன்று தொடர்பிலேயே குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பொறுப்பதிகாரி 200 மில்லியன் சொத்துக்களைப் பிணையாக வைத்து அண்மையில் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக