08 ஏப்ரல் 2016

இலங்கையில் அதிகரித்து வரும் சடலங்கள் மீட்பு!

மட்டக்களப்பு,பெரியபோரதீவு பிரதான வீதியில் உள்ள காட்டுப் பாலத்தடி பகுதியில் இருந்து நேற்று மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் சடலத்திற்கு அருகில் துவிச்சக்கர வண்டி ஒன்று காணப்படுவதாகவும்,குறித்த நபர் துவிச்சக்கர வண்டியில் பயணிக்கும்போது பாலத்திற்குள் வீழ்ந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.அண்மைக்காலங்களில் தொடர்ந்து சடலங்கள் மீட்கப்படுவதான செய்திகள் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக