15 ஏப்ரல் 2018

சிகரெட் உயிரைக் குடித்தது..கிளிநொச்சியில் சம்பவம்!

கிளிநொச்சி பாரதிபுரத்தில் சிகரெட் புகைத்தவாறு பெற்றோல் போத்தலுடன் பயணித்தவர், தீ பற்றிக் கொண்டதால், படுகாயமடைந்து உயிரிழந்தார். அதே இடத்தைச் சேர்ந்த இராசேந்திரம் றெனோல்ட் றீகன் (வயது – 34) என்ற குடும்பத் தலைவரே இவ்வாறு உயிரிழந்தார்.
கடந்த 16 ஆம் திகதி இவர் வேலைதேடி மோட்டார் சைக்கிளில்
பயணித்துள்ளார். மூடி இல்லாத போத்தலில் பெற்றோல் கொள்வனவு செய்து சிகரெட் புகைத்தவாறு பயணித்தார். போத்தல் நழுவி விழ பெற்றோல் ஊற்றுப்பட்டது. அதனை எடுக்கக் குனிந்தபோது வாயிலிருந்த சிகரெட் நெருப்புப்பட்டு தீ பற்றியது. அவரது நெஞ்சு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தீ பற்றியது. கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். சிகிச்சை பயனளிக்காது நேற்றுமுன்தினம் உயிரிழந்தார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக