07 ஏப்ரல் 2018

ஜெர்மனியின் முன்ஸ்ரர் நகரில் வாகனத்தால் மோதித் தாக்குதல்!

ஜெர்மனி: பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல், பலர் பலிஜெர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள முன்ஸ்ரர் நகரில் பாதசாரிகளிடையே வாகனம் ஏற்றப்பட்டதில் பலர் மரணமடைந்துள்ளனர்.இந்தச் சம்பவத்தில், அந்த வாகன ஓட்டுநர் உள்பட பலர் இறந்துள்ளதாக உள்ளூர் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.தாக்குதலாளி தம்மைத் தாமே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று கருதப்படும் இந்தச் சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்று என்று உள்ளூர் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.அந்த நகரின் கீபேன்கெர்ல் சிலை அருகே நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சரக்கு வாகனம் ஒன்று நத்தார் பொருட்கள் வாங்குவதற்கான சந்தையில் பார ஊர்தி ஏற்றப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.இன்று தாக்குதல் நடந்த இடத்துக்குச் செல்லவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கீபேன்கெர்ல் சிலை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் மேசை மற்றும் நாட்காலிகள் சேதமடைதிருக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

நன்றி:பிபிசி தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக