25 மே 2014

தமிழர் சொத்துக்களை அபகரித்தல் தொடர்கிறது!

கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம், தடைவிதிக்கப்பட்ட 16 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்களின் எல்லா நிதிகள், ஏனைய நிதிச் சொத்துகள், பொருளாதார வளங்களையும், முடக்கும் வர்த்தமானி அறிவித்தலை சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு நிதியளிப்போர் என்று ஐ.நா பாதுகாப்புச்சபையின் 1373 தீர்மானத்துக்கு அமைய வர்த்தமானியில் பெயரிடப்பட்ட இந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் சொத்துக்களையே முடக்குவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.இந்த தடை அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதற்குப பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்ட சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இதற்கான வர்த்தமானி அறிவிப்பை கடந்த வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார்.இதற்கமைய, பயங்கரவாதத்துக்கு நிதியளிப்போர் என்று பிரகடனப்படுத்தப்பட்ட, அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் எல்லா சொத்துகள் மற்றும் நிதிகள், பொருளாதார வளங்களும், அவர்களினால் சட்டரீதியாக நியமிக்கப்பட்டவர்களின் வசமுள்ள சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.இதுதொடர்பான உத்தரவு சிறிலங்கா மத்திய வங்கியின் பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவினால், சம்பந்தப்பட்ட எல்லா துறைகளுக்கும் குறிப்பாக வங்கிகள் நிதி நிறுவனங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக