08 மே 2014

சிறீலங்காவிற்கு பத்தாயிரம் கோடி ஒதுக்குகிறது ஐரோப்பிய ஒன்றியம்!

சிறிலங்காவில் போரினாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்ய இலங்கை ரூபா மதிப்பீட்டின்படி பத்தாயிரம் கோடி ரூபாவினை ஒதுக்கியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 2015ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்த நிதி கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் தூதுவர் டேவிட் டெலி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஐரோப்பிய ஆணைக்குழுவின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையானது ஐரோப்பிய ஆணைக்குழுவுடன் நெருக்கமான நட்புறவைக் கொண்டுள்ள ஒரு நாடாகும். அந்த வகையில் இங்கு போர் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருபதாயிரம் வீடுகள் மற்றும் 200 பாடசாலைகளை நிர்மாணிப்பதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
அதற்கு மேலதிகமாக அந்தப்பிரதேசங்களில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப வேறு திட்டங்களுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக