25 மார்ச் 2012

தமராவுக்கு சிங்களத்தின் நன்றிக்கடன்!

Kunanajakamசுவிஸில் உள்ள ஸ்ரீலங்கா தூதுவரும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா.பிரதிநிதியுமான தமரா குணநாயகம் சிங்களவர்களுக்கெதிரான துரோகி என்றும் அவர் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான சீ.ஐ.ஏவுக்கு பணியாற்றி வருகின்றாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக நேற்று வெளியான அரசுசார்பு திவய்ன சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்காவின் வெளிநாட்டு அமைச்சில் ஜெனிவா தூதராக பணியாற்றிவரும் தமரா குணநாயகம் தொடர்பாகத் தற்போது சிறிலங்கா புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள திவய்ன, இந்தப் தமிழ் பெண் புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து இலங்கைக்கு எதிராகச் செயற்படுகிறார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
அமெரிக்க பிரேரணை நிறைவேற்றப்பட்ட தினத்தன்று இரவு அரசசார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் இணைந்து, இந்தப் பெண் அதிகாரிக்கு ஆடம்பர விடுதி ஒன்றில் விருந்துபசாரம் ஒன்றை நடத்தியுள்ளனர் என்றும் திவய்ன பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சிங்கள பேரினவாதிகளின் பக்கம் நின்று தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படும் தமரா குணநாயகம் போன்றவர்களுக்கு சிங்கள பேரினவாதம் வழங்கும் பரிசு இதுதான் என்பதை சிறிலங்கா பேரினவாதிகளுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் சில தமிழர்கள் உணர்ந்து கொள்வதற்கு இது நல்ல பாடமாகும்.
இப்போது தமரா குணநாயகம் துரோகி ஆக்கப்பட்டிருக்கிறார். நாளை சிங்கள பேரினவாதிகளுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் டக்ளஸ், கருணா, பிள்ளையான், போன்றவர்களுக்கும் இதேகதிதான் என்பதை அவர்கள் உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை என புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக