20 மார்ச் 2012

ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய சுவிசில் கைது!

ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரியவை சுவிட்ஸர்லாந்து காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுனந்த தேசப்பிரிய சுதந்திர ஊடக அமைப்பின் முன்னாள் அமைப்பாளராக கடமையாற்றி வந்தார். தற்போது வெளிநாடொன்றில் அடைக்கலம் கோரியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகளில் கலந்து கொண்ட இலங்கையர்களை ரகசியமாக வீடியோ பதிவு செய்த காரணத்தால் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கூடாது எனத் தெரிவித்து ஐரோப்பிய வாழ் இலங்கையர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை, சுனந்த ரகசியமாக வீடியோ பதிவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்தே சுனந்த தேசப்பிரயவை சுவிட்ஸர்லாந்து காவல்துறையினர் கைது செய்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக