21 மார்ச் 2012

இறுதித் தீர்மானம் இன்று,சிறிலங்கா கலக்கம்.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை பெரும்பாலும் அமெரிக்கா இன்று சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஜெனிவாவில் குவிந்துள்ள சிறிலங்காவின் 70 இற்கும் அதிகமான இராஜதந்திரிகள் கலக்கத்துடன் இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா தொடர்பாக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் வரைபு ஏற்கனவே ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்கா சமர்ப்பித்து விட்டது.
எனினும் அதில் திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர், இறுதித் தீர்மானம் இன்று பெரும்பாலும் சபையின் விவாதத்துக்காக சமர்ப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தீர்மானம் இன்று சமர்ப்பிக்கப்படாது போனால் நாளைய கூட்டத்தில் முன்வைக்கப்படும்.
கூட்டத்தொடரின் இறுதிநாளான வரும் வெள்ளிக்கிழமை இந்தத் தீர்மானம் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, இந்தத் தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்படக் கூடும் என்று ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா இராஜதந்திரி ஒருவர் கூறியதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எந்த நிலையை எதிர்கொள்வதற்கும் தாம் தயாராகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக