23 மார்ச் 2012

மகிந்தவிற்கு ஜெனீவாவில் விழுந்த முதல் அடி!

ஜெனீவா மாநாட்டில் நேற்று (22) இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை, 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 24 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
இலங்கைக்கு கிடைத்த இந்தத் தோல்வி ராஜபக்‌ஷவின் ஏகாதிபத்திய ஆட்சிக்கு விழுந்த முதல் அடி என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த பிரேரணைக்கமைய நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் அமுல்படுத்தப்பட வேண்டும். அதன்படி பொலிஸ் ஆணைக்குழு, சுயாதீன மக்கள் சேவை ஆணைக்குழு, காணாமல் போகும் சம்பவங்களை விசாரிப்பதற்கான விசேட ஆணைக்குழு ஆகியவற்றை நியமிக்க வேண்டும். அத்துடன், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வுகண்டு, இணக்கப்பாட்டைக் கட்டியெழுப்புதல், வடக்கிலுள்ள இராணுவ ஆட்சியை தளர்த்துதல், பொலிஸ்துறையை, பாதுகாப்பு அமைச்சிலிருந்து வேறுபடுத்தல் உட்பட்ட சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். எனினும், இவற்றைச் செய்தால் ராஜபக்‌ஷ நிர்வாகம் செயலிழந்துபோகக் கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இறுதிக் கட்ட யுத்ததம் முன்னெடுக்கப்பட்டதைப் போல் ஜெனீவா பிரேரணையை எதிர்கொண்ட ராஜபக்‌ஷ அரசாங்கம், ஆரம்பம் முதலே அதனைத் தோற்கடிப்பதற்கு முயற்சித்தது.மேற்குலகத்திற்கு எதிராக மக்கள் வீதிகளில் இறக்கப்பட்டு பிழையாக வழிநடத்தப்பட்டனர். இவ்வாறு வீதியில் இறக்கப்பட்ட சக்தி தற்போது தமிழ் மக்களுக்கு எதிராகவும் திருப்பிவிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
குறிப்பாக தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்படுதை எதிர்ப்பதற்காக வீதியில் இறக்கப்பட்ட மக்கள் திசைதிருப்பபட்டுள்ளனர்.இவ்வாறு மக்களை வீதியில் இறக்கி தற்போதைய அரசாங்கம் இனவாத சக்தியை வலுப்படுத்திக்கொண்டுள்ளது. அத்துடன், தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்குவதற்கு இந்த சக்தி இடளிக்கும் என்ற நம்பிக்கையும் அற்றுப் போயுள்ளது.
பல்வேறு கருத்துக்கள், கொள்கைகளைக் கொண்ட கட்சிகளையும், பங்காளிகளை இணைந்துகொண்டுள்ள மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம், அவர்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி ராஜபக்‌ஷ நிர்வாகத்தை வலுப்படுத்தும் அரசியல் செயற்பாட்டையே இதுவரை முன்னெடுத்துவந்தது. எனினும், ஜெனீவா பிரேரணையானது ராஜபக்‌ஷ நிர்வாகத்தை வலுப்படுத்தும் அரசியல் செயற்பாட்டிற்கு விழுந்த அடியாகவும் கருதப்படுகிறது.
இந்த நிலையில், ஜெனீவா பிரேரணையை இலங்கை அரசாங்கம் புறந்தள்ளினாலோ, நடைமுறைப்படுத்தத் தவறினாலோ எதிர்காலத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு ரீதியாக பாரிய பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக