26 மார்ச் 2012

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் விரிசல்!

இந்தியாவின் தீர்மானம் இலங்கைக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கக் கூடும் என அந்நாட்டு பிரதமர் மன்மோகன்சிங்கினால் வெளியிடப்பட்ட கருத்து, இலங்கைக்கு பாதகமாக அமைந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் இந்த அறிவிப்பு, இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கத் தயாராக இருந்த பல நாடுகளின் தீர்மானத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு சார்பாக வாக்களிக்கத் தயாராகியிருந்த பல நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளில் சில ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளதனை மறுப்பதற்கில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக