12 அக்டோபர் 2014

அகதிகள் விடயத்தில் அவுஸ்திரேலியாவில் மாற்றம் வரலாம்!

இலங்கை அகதிகள் தொடர்பான தனது கொள்கையில் ஆஸ்திரேலியா மாற்றத்தை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது என ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் அகதிகள் தொடர்பில் ஆஸ்திரேலியா கடுமையான நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறது.இந்த விடயம் ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை உட்பட பல சர்வதேச அமைப்புகளாலும் விமர்சிக்கப்படுகின்றது. தற்போது ஆஸ்திரேலியா ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்ஸின் அங்கத்துவத்தை பெற முயற்சி செய்கின்றது.இதனால் அகதிகள் நிலைப்பாடு தொடர்பில் தனது இறுக்கமான கொள்கைகளை சற்றுத் தளர்த்துவதற்கு யோசிக்கின்றது. இதனை அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷப்பும் உறுதி செய்தார் என்று அந்தச் செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக