16 அக்டோபர் 2014

மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய இரு சடலங்கள் மீட்பு!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன ஊறணியில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை காலை சின்ன ஊறணி, செழியன் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே இந்த சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
இவர் சடலம் மீட்கப்பட்ட வீட்டின் உரிமையாளரான சுந்தரநாதன் சந்திரகுமார் (57வயது) என மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற நீதிவான் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறு பணித்தார்.
குடும்ப பிரச்சினை காரணமாகவே இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இதேபோன்று மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
மகிழடித்தீவினை சேர்ந்த அருணாசலம் கிருபாகரன் (32) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக