09 அக்டோபர் 2014

"நாஞ்சில் சம்பத் ராசியானவர்"முகநூலில் கிண்டல்!

பேஸ்புக் குசும்பர்களின் லேட்டஸ்ட் ரகளையில் சிக்கியிருப்பவர் நாஞ்சில் சம்பத். அவரை வைத்து ஒரு கிண்டல் போட்டோவை உலா விட்டுள்ளனர். நாஞ்சில் சம்பத் எந்தக் கட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சியின் தலைவருக்கு சிறைவாசம்தான் கிடைக்கும் என்பதுதான் இந்த கிண்டலின் சாராம்சம். அடுத்து நாஞ்சில் சம்பத் பேசாமல் திமுகவில் சேரட்டும் என்றும் கிண்டலைத் தட்டி விட்டுள்ளனர்.இதுதொடர்பாக பேஸ்புக்கில் போடப்பட்டுள்ள ஒரு போட்டோவில், நாஞ்சில் சம்பத் ராசியான மனிதர் என தலைப்பு கொடுத்துள்ளனர்.மேலும் வைகோவோடு இருந்தபோது வைகோ சிறைக்குச் சென்றார் என்று அதில் வரி வருகிறது.இப்போது ஜெயலலிதாவோடு இருக்கும்போது, ஜெயலலிதா சிறைக்குச் சென்றார் என்று போட்டுள்ளனர்.அடுத்ததாக கருணாநிதியோடு இணைய வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்கிறார்கள் என்ற வாசகத்தோடு அந்த நக்கல் முடிகிறது.அதுபோதாதென்று #i support Nanjil Sampath என்று வேறு போட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக