14 அக்டோபர் 2014

யாழில் சிங்களவர்களை குடியேற்றப்போகும் மகிந்த!

வட மாகாணத்தில் இருந்து வெளியேறிய சிங்கள மக்களை குடியேற்றப் போவதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற வடமாகாண ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார். சிங்கள மக்களுக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் காணிகள் இருந்ததாகவும், அவர்களை விரைவில் குடியேற்றப்போவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.நாம் மகாவலி கங்கையை வடக்கு மாகாணத்திற்கு கொண்டுவர முயற்சிக்கின்றோம். வடக்கில் போரினால் இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றம் நிறைவடைந்து விட்டதாகவும், அடுத்தக் கட்டமாக இங்கிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மக்களையும் குடியேற்ற வேண்டுமெனவும் அதற்கான காலம் வந்து விட்டதாகவும் ஜனாதிபதி மேலும் கூறியிருந்தார்.எனினும் வலிகாமம் வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சுமார் ஒரு இலட்சம் வரையான தமிழ் மக்கள் கடந்த 24 வருடங்களாக அகதி வாழ்க்கையினை வாழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக