26 அக்டோபர் 2014

புலிகள் மீதான தடை நீக்கம் குறித்து பிரிட்டன் ஆராய்கிறதாம்!

ஐரோப்பிய நீதிமன்றம் விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பாக சமீபத்தில் அளித்துள்ள தீர்ப்பு குறித்து ஆராய்ந்து வருவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
2000 ஆம் ஆண்டின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே பிரிட்டனில் அநத அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது.இது ஐரோப்பிய ஒன்றிய ஏற்பாடுகளிலிருந்து வித்தியாசமானது. அதேவேளை இந்த தீர்ப்பு உறுப்பு நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் ரீதியிலான ஒன்றல்ல என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.எனினும் நடைமுறை விதிகளின் அடிப்படையில் சட்ட ரீதியாக புலிகளுக்கு எதிரான தடை நீக்கம் பற்றிய தீர்ப்பு இது என்பதும் முக்கியமானது.
அந்த வகையில் பிரிட்டனும் ஏனைய உறுப்புநாடுகள் போன்று குறிப்பிட்ட தீர்ப்பு மற்றும் பொருத்தமான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருகிறது.இவேளை அடுத்த மூன்று மாத காலத்திற்க்கு விடுதலைப்புலிகளின் சொத்துக்கள் முடக்கம் நீடிக்கும் என இலங்கைக்கான பிரிட்டனின் தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக