05 அக்டோபர் 2014

புலம்பெயர் அமைப்புக்களின் தடையை நீக்குமாறு கோரிக்கை!

இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ள புலம்பெயர் அமைப்புக்களையும் தனிப்பட்டவர்களையும் அதில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது.பிரித்தானியாவில் உள்ள பொதுநலவாய நாடுகளின் அலுவலகத்திடம் இந்தக்கோரிக்கையை உலகத் தமிழர் பேரவை முன்வைத்துள்ளது.இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உலக தமிழர் பேரவை அமைப்பின் தலைவர், வணக்கத்துக்குரிய எஸ்.ஜே.இமானுவேல் அடிகளார் கேட்டுள்ளார்.ஓக்டோபர் முதலாம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.இதேவேளை இலங்கை தமிழர்களுக்கு பிரித்தானிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக