07 அக்டோபர் 2014

வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவில்லை!

இலங்கையில் இன்னமும் மோசமான நிலையிலுள்ள மனித உரிமை நிலைவரத்தை தாம் சீர்செய்துவருகின்றனர் என்று சர்வதேச சமூகத்துக்கும் இலங்கை மக்களுக்கும் போலியான வாக்குறுதி அளிப்பதை இலங்கை அரசு கைவிடவேண்டும் என சர்வ தேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை குழு இலங்கை தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமையும் நாளை புதன்கிழமையும் ஆய்வு செய்யவுள்ள நிலையிலேயே மன்னிப்புச்சபை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பிரதி இயக்குநர் டேவிட் கிரிவ்த்ஸ் தெரிவித்துள்வை வருமாறு:2002 இல் இலங்கை குறித்து இறுதியாக இடம்பெற்ற ஆய்வின் போது சுட்டிக்காட்டப்பட்ட மனித உரிமை பிரச்சினைகளில் பெரும்பாலானவை இன்றும் காணப்படுகின்றன. இவை குறித்து தீர்வு காணப்படும் என அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளது.இலங்கையில் மாற்றுக் கருத்தையும், உடன்பட மறுத்தலையும் கட்டுப்படுத்த மிகமோசமான சட்டங்கள் பயன்படுத்துகின்றன. சித்திரவதையும், பலவந்தமாக காணமற்செய்யப்படுதலும் தொடர்கின்றன. கருத்துச் சுதந்திரமும் ஒன்றுகூடுவதற்கான உரிமையும் மீறப்படுகின்றன. இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தி நபர்களை உரிய நடைமுறையின்றி தடுத்துவைக்கின்றது. அத்துடன் தன்னுடன் உடன்பட மறுப்பவர்களை மௌனமாக்க அதனைப் பயன்படுத்துகிறது. எனவே சிறுபான்மை மதங்களுக்கு எதிராக அதிகரித்துவரும் தாக்குதல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவேண்டும் என்று அவர் மேலும் தெரவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக