02 அக்டோபர் 2014

மாணவி மீது பலாத்காரம்!வாகன ஓட்டுனர் கைது!

கண்டியில் உள்ள பிரபல மகளிர் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 17 வயது மாணவியை பாடசாலை வேனுக்குள் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கண்டி வாவி சுற்றுவட்ட சிவப்பு மதகு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றில் வல்லுறவு முயற்சி இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை பொலிஸார் சந்தேகநபரை மடக்கிப்படித்துள்ளனர்.குறித்த மாணவி வேன் சாரதியால் மூன்று வருடங்களாக இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.சாரதியின் வேன் கறுப்புக் கண்ணாடி பொருத்தப்பட்டதெனவும் அது அகில இலங்கை அனைத்து மாவட்ட பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சேவை சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி வைத்திய பரிசோதனைக்கென கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக