29 ஏப்ரல் 2012

ஈழம் மலர மாநாடு கூட்டுகிறார் கருணாநிதி!

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதியின் தலைமையில் தனி ஈழ மாநாடு நாளை சென்னையில் ஆரம்பமாகின்றது. 
தமிழ் ஈழ ஒன்றினைந்த அமைப்பு என்ற பெயரில் 1985 ஆம் ஆண்டு கருணாநிதியினால் அமைக்கப்பட்ட அமைப்பே இவ்வாறு நாளை கூடவுள்ளது. சென்னை அறிவாளயத்தில் அமைந்துள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையகத்தில் இந்த ஒன்று கூடல் இடம்பெறவுள்ளது. 
திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் அம்பாசகம், கே வீரமணி, முன்னாள் அமைச்சர் ஜெகதீஸ்வரன், தமிழர் பேரவையின் தலைவர் கே வீரபாண்டி ஆகிய தனி ஈழகொள்ளையாளர்கள் இதில் பங்குகொள்ளவுள்ளனர். 
இலங்கையில் தமிழ் ஈழம் அமையப்பெற வேண்டும் என்று முத்துவேல் கருணாநிதி கடந்த தினத்தில் அறிவித்தல் விடுத்திருந்த நிலையிலேயே நாளைய தினம் இந்த ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் நேற்றைய தினம் மீண்டும் அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தனி ஈழம் அமைய அனைவரும் சாத்வீக போராட்டம் மோற்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 
அதற்காக மகாத்மா காத்தி, அன்னை தெரேசா அதுபோல் இலங்கையில் இருந்த தமிழ் தலைவரான தந்தை செல்வா ஆகியோரின் கொள்கையை பின்பற்றுமாறும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். 
யுத்தம் ஒரு தற்காலிக பின்னடைவே என்று குறிப்பிட்டுள்ள அவர், இலங்கையில் உள்ள தமிழ் தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட்டிருந்தால் தற்போது ஈழம் மலர்ந்திருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக