28 ஏப்ரல் 2012

ஐ.தே.க இரு குழுக்களிடையே நேற்று கடும் மோதல்!

மத்துகம – அகலவத்தை பிரதேசத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் பொதுக் கூட்டமொன்றில் இருதரப்புக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 
எதிர்வரும் முதலாம் திகதி கொழும்பில் நடத்தப்படவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் சிரார்த்த தினத்தை முன்னிட்டு இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
மாகாண சபை உறுப்பினர்களான சிறிலால் லக்திலக்க, மைத்திரி குணரத்ன ஆகியோரின் தலைமையில் குறித்த நிகழ்வு நடத்தப்பட்டது. இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தேவப்பெரும அங்கு சென்ற நிலையில், முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. 
மத்துகம அமைப்பாளராக செயற்படும் தமது அனுமதியின்றி குறித்த பிரதேசத்தில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தமைக்கு அவர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். 
இதன்போது, தேவப் பெருமவுடன் வந்த குழுவுக்கும், மற்றைய தரப்பினருக்கும் இடையில் மோதல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக