30 ஏப்ரல் 2012

தமிழ் உணர்வு பீறிட்டு கிளம்புகிறது கருணாநிதிக்கு"பழ,கருப்பையா சீற்றம் !


இலங்கையில் தமிழீழம் தனித்ததொரு நாடாக அமைய மத்திய அரசு ஆதரவு தர வேண்டும் என்று திடீரென்று இன உணர்வு பீறிட்டுக் கிளம்பப் பெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்! குதிரை ஓடிவிட்ட பிறகு லாயத்தைப் பூட்டுவதற்குப் பூட்டைத் தேடுகிறார் கருணாநிதி!
மூன்றாண்டுகளுக்கு முன்வரை போராடுவதற்கு ஒரு வலுவான போராளிகள் கூட்டம் இருந்தது. அப்போது பேசியிருக்க வேண்டும் இதை! அப்போது சகோதர யுத்தம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர்; தமிழீழம் சாத்தியமில்லை என்று பேசிக் கொண்டிருந்தவர்; இப்போது "ஈழம் எங்கள் தாகம்' என்று புறப்பட்டு விட்டார்!
அதை ஐ.நா.வுக்குக் கொண்டு செல்ல மத்திய அரசுக்கு விண்ணப்பம் போடுகிறார் கருணாநிதி! ஈழத்தை இந்த அளவுக்குச் சின்னாபின்னப்படுத்தியதே தானும் மத்திய அரசும்தான் என்பதை மூன்றாண்டுகளில் மக்கள் மறந்திருப்பார்கள் என்று கருதிக் கொண்டு! யாருடைய தயவும் இல்லாமல் ஈழம் பல ஆண்டுகள் ஓர் "அறிவிக்கப்படாத' சுதந்திர நாடாகவே இருந்தது. வரி வசூல் நடந்தது; காவல் நிலையங்கள் செயல்பட்டன; நீதிமன்றங்கள் இயங்கின; சாலைகள் போடப்பட்டன!
ஐ.நா. அவையில் அது ஓர் உறுப்பு நாடாக இல்லை என்பதைத் தவிர வேறு எந்த நிலையிலும் அது குறைவுடையதாக இல்லை.
சிங்கள தேசியம் வாலைச் சுருட்டிக் கொண்டிருந்தது! பெரும்பான்மையான மக்களைச் சிறுபான்மை மக்கள் ஒரு கோட்டுக்கு இந்தப்புறம் வராதவாறு நிறுத்தி வைத்திருந்த வியப்பு உலக வரலாற்றில் முதன் முதலாக அரங்கேறியது! இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கள இனவாதம் ஒரு நேரத்திற்காகக் காத்திருந்தது.
ஒரு பெரிய வரலாற்று வேடிக்கை என்னவென்றால், கருணாநிதி அரசும் மன்மோகன் அரசும் சிறுபான்மை அரசுகள்; ஒன்றை ஒன்று முட்டுக் கொடுத்துக் கொண்டு வாழ வேண்டிய நிலையில் இருந்தவை! காங்கிரஸ் எப்போதுமே பெரிய அண்ணன்தான்! கருணாநிதி எப்போதுமே வாலைக் காலுக்குள் வைத்துக் கொண்டு தில்லி பீடத்திற்குப் பவ்வியமாக வாழ்ந்து பழக்கப்பட்டவர்தான்!
தமிழ் ரத்தத்தை மண்ணில் தெறிக்கச் செய்கிற மன்மோகன் அரசின் கூட்டணியில் தி.மு.க. இருக்காது என்று கருணாநிதி எகிறி இருந்தால், மத்திய அரசு கவிழும் நிலையும், அதன் எதிர்விளைவாகக் கருணாநிதி அரசு தமிழ்நாட்டில் கவிழும் நிலையும் ஏற்பட்டிருக்கும்! ஆனால் ஈழத்தில் போர் நின்றிருக்கும்!
ஈழம் "அறிவிக்கப்படாத' சுதந்திர நாடாகவே நீடித்திருக்கும்! சுதந்திர நாடாக இருந்த ஈழத்தைச் சுடுகாடாக்கிவிட்டு, "மீண்டும் தமிழீழம் மலரும்' என்று எழுதுவதற்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் வேண்டும்? இனி எதிலிருந்து தமிழீழத்தை மலரச் செய்வது? சாம்பலிலிருந்தா? சொல்லிப் பார்ப்பதற்குக் கூடக் கருணாநிதிக்குக் கூச்சமாக இல்லையா? எந்த விடுதலை இயக்கமும் தன் இலக்கை இன்றோ, என்றோ அடையாமல் முற்றுப் பெறுவதென்பதே இல்லை! ஆனால் அதைச் சொல்லுகின்ற தகுதி அதை அழிப்பதற்குத் துணை போனவர்க்கு உண்டா என்பதே கேள்வி! சீனத்தில் டெங்சியாபிங் முதலாளித்துவக் கொள்கைக்கு மாறினார்; அது குற்றமில்லை. ஆனால், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகார ஆட்சியின் பெயரால், செங்கொடியின் பெயரால், அரிவாள் சுத்தியலின் பெயரால், வர்க்கமற்ற சமூகக் கொள்கையின் பெயரால், வர்க்க பேதமுள்ள சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டு, அதற்கு நேர்மாறான அடையாளத்திற்குள் ஒளிந்து கொள்ள நினைத்தாரே, அதுதான் குற்றம்! டெங்சியாபிங் தியானன்மென் சதுக்கத்தில் திரண்டிருந்த பல லட்சம் சொந்த உடன்பிறப்புகள் மீது, பகை நாடுகளில் பயன்படுத்த வேண்டிய டாங்கிப் படையை ஏவி ஈவு இரக்கமின்றிச் சுட்டுக் கொன்றொழித்தாரே; எதற்கு? குடியாட்சி வேண்டுமென்று கேட்டதற்காகத்தானே? டெங்சியாபிங்கின் முதலாளித்துவக் கொள்கைகளைக் குடியாட்சியின் வழியாக நிறைவேற்ற முடியாதா? இவ்வளவு படுபாதகக் கொலைகள் ஏன்? இன்னும் சொன்னால் முதலாளித்துவம் தன்னுடைய வசதிக்காகத் தோற்றுவித்துக் கொண்ட அமைப்புத்தானே ஜனநாயகம்! சீனத்தில் இன்னமும் மாவோ வாழ்கிறார்; ஆனால் மாவோவின் கொள்கைகள் மட்டும் சாகடிக்கப்பட்டுவிட்டன.
மாவோ தோற்றுவித்த கட்சியும், மாவோவின் புகழும், அதற்கு நேர்மாறான கொள்கை மாற்றம் சீனாவில் நிகழ்ந்த போதே அழிந்திருக்க வேண்டும்! அதுதான் இயற்கை!
ஆனால், மாவோவின் கொள்கைகளை அழித்தபோது, மாவோ தோற்றுவித்த பொதுவுடைமைக் கட்சி கொதித்தெழவில்லை! பொறுத்துக் கொண்டது! ஆனால், மாவோ உண்டாக்கிய கட்சி அமைப்பை, அதன் வழி நிறுவப்பட்ட ஆட்சி முறையைப் பல லட்சம் மாணவர்கள் அழித்து விடுவார்களோ என்னும் அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, டெங்சியாபிங்கிலிருந்து கட்சியின் கிளைக் கழகச் செயலாளர் வரை கொதித்தெழுந்தனர்.
ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள மாவோ வேண்டும்; அவர் நிறுவிய கட்சி வேண்டும்; அவர் பிடித்த செங்கொடி வேண்டும்! அடையாளங்கள்தாம் முக்கியம்; மக்கள் மாற்றங்களை ஊடுருவி உணர மாட்டார்கள்! மேலே இருந்து கீழே வரை உள்ள அதிகாரப் பங்கீட்டைக் குலைக்காத வரை, எந்தக் கட்சியும் எந்தக் கொள்கைக் கைகழுவல்களையும் பொறுத்துக் கொள்கிறது!
பொதுவுடைமைக் கோட்பாட்டைக் காப்பாற்றப் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகார ஆட்சி முறையால்தான் முடியும் என்று மார்க்ஸ் திண்ணமாக நம்பினார்! ஆனால், முதலாளித்துவத்தைக் காப்பாற்றவும் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தால்தான் முடியும் என்று டெங்சியாபிங் மெய்ப்பித்ததை அறிந்தால் மார்க்ஸ் மயக்கமடைந்து விடுவார்! இது காலத்தின் கேலிதானே!
ஈழத்தை அழிப்பதற்குத் துணை நின்றார் தலைவர் என்றபோதே தமிழினத்தின் மேம்பாட்டுக்காக அண்ணாவால் உருவாக்கப்பட்ட கட்சி கொதித்தெழுந்திருக்க வேண்டாவா? நடக்கவில்லையே! ஏன்? மேலே இருந்து கீழே வரை, முதல்வரிலிருந்து ஊராட்சித் தலைவர் வரை, ஒரு மாநிலத்தில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்!
ஒரு குறிப்பிட்ட கொள்கைக்காக அதிகாரத்தை உதறுவது என்பது தலைவருக்கும், தலைவரின் வெவ்வேறு குடும்பங்களுக்கு மட்டுமல்ல; கடைசிப் படிக்கட்டு அதிகாரத்திலிருப்பவனுக்கும் இயலாதது! இது போன்றவற்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பவர் கருணாநிதி! அந்தக் கட்சியிலேயே அண்ணாவோடு உரசிப் பழகி ஊற்றம் பெற்ற அன்பழகனே, கருணாநிதி ஈழத்தைப் பதவிக்காகக் கைகழுவியபோது, "என்னால் இது முடியாது' என்று அமைச்சர் பதவியை உதறி விட்டு வெளியேறவில்லையே! இனம் அழிகின்றபோதும் ஒரே கட்சியில் மாறாமல் இருப்பது ஒரு சிறப்பா?
கொள்கையை விற்று விட்டுக் கேவலம் "கட்சிக் கற்புப்' பாராட்டுகிற அரசியல்வாதிகள் இருக்கும் நாட்டில் பெய்கின்ற மழையும் நின்று விடாதா?
எல்லாருக்குமே அடையாளங்களில்தான் எல்லாம் என்றாகி விட்டது! அண்ணா தோற்றுவித்த கழகம், அண்ணா தந்த கொடி, அண்ணா தந்த சின்னம், டி.எம். நாயரிலிருந்து தொடர்ச்சியுடைய ஒரு கட்சி என்று சொல்லும்போதும், திராவிட இயக்க நூற்றாண்டு விழாக் கொண்டாடும்போதும் ஒவ்வொரு அடிமட்டத் தொண்டனின் மனத்திலும் ஒரு பெருமிதம் உண்டாகிறது! ஈழம் சுடுகாடாகத் துணைபோனது அந்தப் பெருமிதத்தில் மறைந்து விடாதா?
கருணாநிதியைத் தவிர அந்தக் கட்சியை வேறு யாராலும் காப்பாற்ற முடியாது! சிறு பிள்ளைகள் கீழே போட்டு உடைத்து விடுவார்கள் என்று நினைக்கிறார்களே, இது எத்துணை பெரிய சிறுபிள்ளைத்தனம்? பழைய பாட்டை ரீ-மிக்ஸ் செய்து பாட வேண்டியதுதானே! மீண்டும் தமிழீழம் என்னும்போது, "எப்படி?' என்னும் கேள்வி எழும்!
ஐ.நா. மூலம் தமிழ் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தித் தமிழீழ விடுதலையைப் பெற வேண்டியதுதானே என்று முழங்கினால், "தலைவர் கொள்கையை எப்போது மறந்தார்' என்று தொண்டன் புளகாங்கிதம் அடைய மாட்டானா?
சூடான் நாட்டிலிருந்து தெற்குச் சூடான் என்னும் தனிநாடு 2011}இல் ஐ.நா. வாக்கெடுப்பின் மூலம் உருவாகவில்லையா?
அதுபோல் தமிழீழத்தை உருவாக்கலாம் என்று கருணாநிதி மெய்விளக்கச் சான்றுகளோடு சொல்லும்போது, உடன்பிறப்புகளுக்கு மெய் புல்லரிக்காதா? 2006}லேயே செர்பியாவிலிருந்து கொசோவா என்னும் தனிநாடு இதே அடிப்படையில் பிரிந்திருக்கும்போது, இப்போது சொல்வதை அப்போதே சொல்லி, 2009}இல் நடந்த நான்காம் ஈழப் போரைத் தவிர்த்திருக்கலாமே கருணாநிதி!
ஈழத்தில் 45,000 பெண்கள் விதவைகளாகி இருக்கமாட்டார்களே! அவ்வளவு எளிதா சுதந்திரம்?
""அக்கா அக்கா என்று நீ அழைத்தாய்; அக்கா வந்து கொடுக்கச் சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே'' என்றார் பாரதிதாசன்!
கருணாநிதியின் நோக்கம் கொள்கை மாறவில்லை என்பதுபோல் காட்டிக் கொஞ்சம் தமிழ்ச் சொரணை உள்ளவர்களை நம்ப வைப்பது! கசாப்புக் கடைக்காரன் ராஜபட்சவைப் போர்க் குற்றவாளியாக்க ஐ.நா. வாக்கெடுப்பால் முடிந்ததா? வாக்கெடுப்பின் மூலம் விடுதலை பெறுவாராம் கருணாநிதி! கேப்பையிலே நெய் வடிகிறது என்கிறார் கருணாநிதி! ராஜபட்ச போர்க் குற்றவாளியா இல்லையா என்று விசாரிக்க ராஜபட்ச அரசின் அனுமதி வேண்டும் என்று தீர்மானத்தைத் திருத்தி நீர்த்துப் போகச் செய்து விட்டுத்தானே அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது!
எது எப்படியானால் என்ன?
"மகாத்மா காந்திக்கு ஜே!' என்று காங்கிரஸ் புறப்படும்!
"திராவிட இயக்க நூற்றாண்டு விழா' என்று கருணாநிதி புறப்படுவார்!
காந்தி, அண்ணாவின் கொள்கைகளா முக்கியம்?
காந்தி, அண்ணாவின் பெயர்கள்தாமே முக்கியம்!
அடையாளங்களில்தானே அரசியல் நடக்கிறது!
-தினமணி-

29 ஏப்ரல் 2012

ஈழம் மலர மாநாடு கூட்டுகிறார் கருணாநிதி!

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதியின் தலைமையில் தனி ஈழ மாநாடு நாளை சென்னையில் ஆரம்பமாகின்றது. 
தமிழ் ஈழ ஒன்றினைந்த அமைப்பு என்ற பெயரில் 1985 ஆம் ஆண்டு கருணாநிதியினால் அமைக்கப்பட்ட அமைப்பே இவ்வாறு நாளை கூடவுள்ளது. சென்னை அறிவாளயத்தில் அமைந்துள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையகத்தில் இந்த ஒன்று கூடல் இடம்பெறவுள்ளது. 
திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் அம்பாசகம், கே வீரமணி, முன்னாள் அமைச்சர் ஜெகதீஸ்வரன், தமிழர் பேரவையின் தலைவர் கே வீரபாண்டி ஆகிய தனி ஈழகொள்ளையாளர்கள் இதில் பங்குகொள்ளவுள்ளனர். 
இலங்கையில் தமிழ் ஈழம் அமையப்பெற வேண்டும் என்று முத்துவேல் கருணாநிதி கடந்த தினத்தில் அறிவித்தல் விடுத்திருந்த நிலையிலேயே நாளைய தினம் இந்த ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் நேற்றைய தினம் மீண்டும் அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தனி ஈழம் அமைய அனைவரும் சாத்வீக போராட்டம் மோற்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 
அதற்காக மகாத்மா காத்தி, அன்னை தெரேசா அதுபோல் இலங்கையில் இருந்த தமிழ் தலைவரான தந்தை செல்வா ஆகியோரின் கொள்கையை பின்பற்றுமாறும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். 
யுத்தம் ஒரு தற்காலிக பின்னடைவே என்று குறிப்பிட்டுள்ள அவர், இலங்கையில் உள்ள தமிழ் தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட்டிருந்தால் தற்போது ஈழம் மலர்ந்திருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பிரித்தானியாவை விட்டு வெளியேறுகிறார் பிரசன்ன சில்வா!


சில்வா கொழும்பு திரும்புகிறார்பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் – போர்க்குற்றம் சாட்டப்படும் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா இந்தவாரம் கொழும்பு திரும்பவுள்ளார்.
மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா இந்தவாரம் கொழும்பு திரும்புவார் என்றும் இனிமேல் அவர் பிரித்தானியாவில் பணியாற்றமாட்டார் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சரத் திசநாயக்க, உறுதிப்படுத்தியுள்ளார்.
இவரது இடத்துக்கு யாரை நியமிப்பது என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு வரும் காலத்தில் வேறு எங்காவது இராஜதந்திரப் பதவி ஏதும் வழங்கப்படுமா என்ற கேள்விக்கும் அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.
இவரது பணிக்காலம் முடிவடைந்த நிலையிலேயே சிறிலங்காவுக்குத் திரும்புவதாகவும் சரத் திசநாயக்க கூறியுள்ளார்.
இறுதிக்கட்டப் போரில் சிறிலங்கா இராணுவத்தின் 59வது டிவிசனுக்குத் தலைதாங்கிய மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா போர்க்குற்றவாளி என்றும் அவருக்கான இராஜதந்திர விலக்குரிமையை நீக்க வேண்டும் என்றும் பிரித்தானிய தமிழர் பேரவை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரிடம் கோரியிருந்தது.
அத்துடன் பிரித்தானிய நாடாளுமன்றத்திலும், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா தப்பிச் செல்ல இடமளிக்கக் கூடாது என்று குரல் எழுப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

28 ஏப்ரல் 2012

கிளஸ்டர் குண்டு பயன்படுத்தப்பட்டது உண்மை-மருத்துவர் சாட்சியம்!

cluster-bombsபோரில் தாம் ஒருபோதும் கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை என்று சிறிலங்கா படைத்தரப்பு மறுத்துள்ள நிலையில், கிளஸ்டர் குண்டினால் பாதிக்கப்பட்ட ஒருவரை நேரில் கண்ட மருத்துவப் பணியாளர் ஒருவரின் சாட்சியத்தை ஏபி செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் போரின் போது, வெடிக்காத கிளஸ்டர் குண்டினால் காயமடைந்த ஒருவரைத் தான் கண்டதாக அந்த மருத்துவப் பணியாளர் ஏபி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
சிறிலங்காவில் போரின் இறுதிகட்டத்தில், கிளஸ்டர் குண்டு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஐ.நாவின் வெடிபொருள் நிபுணர் அலன் போஸ்டனின் அறிக்கையை ஏபி செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்டிருந்தது.
இதனை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் அடிப்படையற்றது என்று நிராகரித்துள்ள நிலையிலேயே, கிளஸ்டர் குண்டினால் பாதிக்கப்பட்டவரை நேரில் கண்டவரின் சாட்சியத்தை வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தினால் தனக்கு ஆபத்து நேரிடலாம் என்பதால் தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த மருத்துவப் பணியாளர் மேலும் கூறியுள்ளதாவது -
“போரின் இறுதி மாதங்களில் வெடிக்காத கிளஸ்டர் குண்டு ஒன்றினால் காயமடைந்த ஒருவரைப் பார்த்தேன்.
அவரது காலைக் கிழித்துக் கொண்டு நுழைந்த அந்த கிளஸ்டர் குண்டின் பாகம், வெடிக்காத நிலையில் புதைந்து போயிருந்தது.
பெப்ரவரி மாதத் தொடக்கத்தில் புதுக்குடியிருப்பு மருத்துவமனைச் சுற்றாடலில் தாம் கிளஸ்டர் குண்டின் சிதறல்களைக் கண்டுபிடித்ததாக ஐ.நாவின் உள்ளூர் பணியாளர்கள் என்னிடம் கூறியிருந்தனர்.
புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்த நோயாளர்கள் கிளஸ்டர் குண்டுகளால் காயமடைந்ததாக கூறியதை அடுத்து அந்த மருத்துவமனை புதுமாத்தளனுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது.
வித்தியாசமான வெடிப்புச்சத்தம் கேட்டது. பாரிய குண்டுச்சத்தத்தை அடுத்து சிறிய குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன.
காயங்கள் பலமானதாக இருந்ததால் மருத்துவ அதிகாரிகளால் சான்றுகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதன் பின்னர் மார்ச் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் ஒருவர் தனது காலின் கீழ்ப் பகுதியில் காயமடைந்த நிலையில் வந்தார்.
அவரது காயத்தை மருத்துவ அதிகாரிகள் சுத்தம் செய்த போது, கிளஸ்டர் குண்டின் சிறியதொரு வெடிக்காத பாகம் உள்ளிருந்ததை கண்டுபிடித்தனர்.
இதனால், குண்டு இருந்த அவரது முழங்காலுக்கு கீழான பகுதியை மருத்துவ அதிகாரிகள் வெட்டி அகற்றினர்.
அவரது காலுக்குள் குண்டு இருந்தது.
அதனை செயலிழக்க வைப்பது பாதுகாப்பற்றது என்பதால், அவரது கால் அகற்றப்பட்டு வீசப்பட்டது.“ என்றும் அந்த மருத்துவப் பணியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஏபி பெற்றுக் கொண்ட ஒரு ஒளிப்படத்தில், ஒருவரது முழங்காலுக்குக் கீழ் உலோக உருளை ஒன்று புதைந்துள்ளதை காணமுடிகிறது.
இதை தொழில்நுட்ப வல்லுனர்களிடம் காண்பித்தபோது, அது ஒரு கிளஸ்டர் குண்டு தானா இல்லையா என்பதை கூறமுடியவில்லை என்று தெரிவித்துள்ளதாகவும் ஏபி குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, தமிழ்ப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசபடைகள் மேற்கொண்ட போரின் போது, பல ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர் என்றும் இவர்களில் பலர் வெள்ளை பொஸ்பரஸ் குண்டினால் ஏற்பட்டிருக்கக் கூடிய எரிகாயங்களுக்கு உள்ளாகியதாகவும் ஏபி தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அந்த மருத்துவப் பணியாளர், “வெள்ளைப் பொஸ்பரசினால் ஏற்பட்ட காயங்களுடன் நோயாளர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்.
குண்டுவெடிப்பு நடந்த பகுதிக்கருகே சென்று பார்த்தபோது அந்த இடம் கருகிப் போயிருந்தது“ என்றும் தெரிவித்துள்ளார்.
வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதை அனைத்துலக சட்டங்கள் தடை செய்யவில்லை.
ஆனால் பொதுமக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இவை பயன்படுத்தப்படுவது மனிதஉரிமை அமைப்புகள் போர்க்குற்றம் என்று கூறுவதாகவும் ஏபி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஐ.தே.க இரு குழுக்களிடையே நேற்று கடும் மோதல்!

மத்துகம – அகலவத்தை பிரதேசத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் பொதுக் கூட்டமொன்றில் இருதரப்புக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 
எதிர்வரும் முதலாம் திகதி கொழும்பில் நடத்தப்படவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் சிரார்த்த தினத்தை முன்னிட்டு இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
மாகாண சபை உறுப்பினர்களான சிறிலால் லக்திலக்க, மைத்திரி குணரத்ன ஆகியோரின் தலைமையில் குறித்த நிகழ்வு நடத்தப்பட்டது. இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தேவப்பெரும அங்கு சென்ற நிலையில், முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. 
மத்துகம அமைப்பாளராக செயற்படும் தமது அனுமதியின்றி குறித்த பிரதேசத்தில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தமைக்கு அவர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். 
இதன்போது, தேவப் பெருமவுடன் வந்த குழுவுக்கும், மற்றைய தரப்பினருக்கும் இடையில் மோதல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

மே தினப் பேரணியில் கையெழுத்து வேட்டை!


மத்திய லண்டனில் நடைபெறும் மே 1 ம் திகதி சர்வதேச தொழிலாளர் தின ஊர்வலத்தில் அனைத்து தமிழ் மக்கள் கலந்து கொண்டு ஈழத்தமிழினத்திற்கு எதிராக சிறிலங்காஅரசினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பை பிரித்தானிய வாழ் அனைத்து இன சமூக மக்களுக்கும் எடுத்துச் சொல்வோம்.
தமிழினம் ஓர் தனித்துவமான இறையாண்மை உள்ள இனம் என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டுவதற்கும், பிரித்தானிய பாராளுமன்றத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச சுயாதீன விசாரணை தொடர்பான இணையத்தள மனுவில் கையொப்பங்கள் பெறுவதற்கான ஏற்பாடுகளும் பிரத்தானிய தமிழர் பேரவையினால் மேற்கொண்டுள்ளது.
இப் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் அணிதிரண்டு வருமாறு கேட்டுக் கொள்வதோடு இணைய தள மனுவில் கையெழுத்துப் பெறுவதற்கு உதவ விரும்புவோர் முற்கூட்டியே தொடர்பு கொள்ளுமாறும், கொண்டுசெல்லும் இணையத்தள வசதிகள் உள்ள மடிக் கணணி(Laptop) உள்ளவர்கள் இவ் இணையவழி கையொப்பமிடலுக்கு உதவுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
காலம்: 1 May 2012 10:30 செவ்வாய் கிழமை.
நடை பெறும் இடம்.
Clerkenwell Green EC1
(nearest tube � Farringdon)
தொடர்புகளுக்கு:
begin_of_the_skype_highlighting            020 8808 0465      end_of_the_skype_highlighting
078 2544 8753 begin_of_the_skype_highlighting            078 2544 8753    

27 ஏப்ரல் 2012

ஐ.நா.வருகையையொட்டி அகற்றப்படும் காவலரண்கள்!

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச விவகாரங்களைக் கையாளும் விசேட இராஜதந்திரிகளை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவொன்று அவசரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு அடுத்த மாத நடுப்பகுதியில் இலங்கை வருகின்றது என்றும் இதனை ஒட்டி வன்னியில் உள்ள படை அரண்கள் அகற்றப்பட்டு மறைவான இடங்களில் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய இலங்கை அரசு செயற்பட வேண்டும் என சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் நிலையிலேயே, ஐ.நா.மனித உரிமைகள் குழு அவசர பயணமொன்றை மேற்கொண்டு கொழும்பு வரவுள்ளது.
ஐ.நா. சபையின் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பணிப்புரைக்கமைய இலங்கை வரும் இந்த இராஜதந்திரிகள் குழு, இங்கு முக்கிய சந்திப்புக்கள் பலவற்றையும் நடத்தவுள்ளது என்று அறியமுடிகின்றது.
இதன்படி, இலங்கையின் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட முக்கிய பல அதிகாரிகளைச் சந்தித்து இந்த உயர்மட்டக்குழு கலந்துரையாடும்.
 இலங்கை அரசின் வெளிவிவகார நடவடிக்கைகளைக் கையாளும் முக்கியஸ்தர்களையும் ஐ.நா. குழு சந்தித்துப்  பேச்சு நடத்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளபோதும், அந்தச் சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல் இன்னும் தயாராகவில்லை என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
ஐ.நா.மனித உரிமைகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இலங்கை அரசு நாட்டில் முன்னெடுத்து வரும் நல்லிணக்க நடவடிக்கைகள் உட்பட முக்கிய பல விடயங்கள் குறித்து ஐ.நா. அதிகாரிகள் ஆராய்வார்கள் என்றும் அறிய முடிகிறது.
இலங்கைப் பயணத்தை முடித்துகொண்டு திரும்பும் ழுகு தனது ஆய்வறிக்கையை நவநீதம்பிள்ளை அம்மையாரிடம் கையளிக்கும் என கொழும்பிலுள்ள இராஜதந்திரியொருவர் நேற்று மாலை தெரிவித்தார்.
அதேவேளை, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இவ்வருட இறுதியில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அந்தப் பயணத்துக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் இந்தக் குழு ஆராயும் என அறியமுடிகிறது.
வன்னியில் வீதி ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த படை அரண்கள் அகற்றப்பட்டு அவற்றிற்கு நேராக மறைவான காட்டுப் பகுதிகளில் மீளவும் அமைக்கப்பட்டுவருவதாக வன்னியில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

26 ஏப்ரல் 2012

சிறிலங்கா படைகள் வீசிய கிளஸ்டர் குண்டுகள் – ஐ.நாவிடம் ஆதாரங்கள்!

சிறிலங்காவில் உள்நாட்டுப் போரின் போது சிறிலங்காப் படையினர் கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஐ.நா கண்ணிவெடி அகற்றும் நிபுணர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது முதல்முறையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த அனைத்துலக விசாரணை அழுத்தங்கள் அதிகரிக்கும் என்று அனைத்துலக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நா அபிவிருத்தித் திட்டத்தின், கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைத் திட்ட தொழில்நுட்ப ஆலோசகர் அலன் போஸ்ரன் என்ற நிபுணரே, இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இவர், புதுக்குடியிருப்பில் கிளஸ்டர் குண்டின் வெடிக்காத பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, மின்னஞ்சல் மூலம் அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு அறிவித்துள்ளார்.
“கடந்த மாதம் புதுக்குடியிருப்பில் வீடு ஒன்றில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த உலோகங்களைப் பிரிக்க முற்பட்ட பையன் ஒருவர் அது வெடித்ததில் உயிரிழந்தான். அவனது சகோதரி படுகாயமடைந்தார்.
இதுதொடர்பாக நிழற்படங்களை விசாரணைக் குழுவினர் ஆராய்ந்த போது, கிளஸ்டர் குண்டின் வெடிக்காத சிறிய பகுதிகளை சேகரித்து வீட்டில் வைத்திருந்த போதே, அந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றதை கண்டறிய முடிந்தது.
சிறிலங்காவில் வெடிக்காத நிலையில் கிளஸ்டர் குண்டின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்தடவை.
இதுபற்றி சிறிலங்கா இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை சிறிலங்கா அரசின் பாதுகாப்பு விவகார பேச்சாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல, சிறிலங்காப் படைகள் போரின்போது கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஐ.நாவிடம் இருந்தும் உடனடியாக எந்தக் கருத்தும் வரவில்லை.
2009 பெப்ரவரி மாதம், சிறிலங்கா அரசினால் போர்தவிர்ப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட மருத்துவமனைப் பகுதியில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஐ.நா முதல்முறையாக தகவல் வெளியிட்டிருந்தது.
எனினும் சிறிலங்கா அரசாங்கம் அதை நிராகரித்தது.
அதேவேளை ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில், போர் தவிர்ப்பு வலயத்தில் சிறிலங்காப் படையினர் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிப்பதாக கூறப்பட்டிருந்தது.
சில காயங்கள் கிளஸ்டர் குண்டினால் ஏற்பட்டவை போன்றிருப்பதாகவும் இதுபற்றி மேலதிக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஐ.நா நிபுணர் குழு கூறியிருந்தது.
தற்போது கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் ஐ.நாவிடம் சிக்கியுள்ளதால், சிறிலங்கா மீதான அனைத்துலக போரக்குற்ற விசாரணை அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

25 ஏப்ரல் 2012

சிங்களம் என்றும் ஏறி மிதிக்குமே தவிர கெளரவப்படுத்தாது!

ananthakumarasamisகொழும்பு7 இல் உள்ள கலாயோகி ஆனந்த குமாரசாமி மாவத்தையின் அரைவாசி பகுதி நெலும் பொக்குண மாவத்தையெனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பழையபடி அந்த வீதிக்கு கலாயோகி ஆனந்த குமாரசாமியின் பெயரே சூட்டப்பட வேண்டுமெனவும் கோரி மேல் மாகாண சபையில் செவ்வாய்க்கிழமை கொண்டவரப்பட்ட பிரேரணை 24 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முஜிபுர் ரகுமான் இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்திருந்தார். எனினும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இந்தப் பிரேரணையைத் தோற்கடித்தது.
முதலில் இந்தப் பிரேரணை மீது விவாதம் நடைபெற்றது. பிரேரணையை சமர்ப்பித்த முஜிபுர் ரகுமான் அங்கு உரையாற்றுகையில்;
இலங்கையின் பெயரை உலகளவில் கொண்டு சென்றவர் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி. இதனைக் கருத்திற் கொண்டே லிபட்டி பிளாஸா சுற்றுவட்டம் முதல் ஹோட்டன் பிளேஸ் சுற்றுவட்டம் வரையான கிறீன் பாத் வீதிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
இப்பாதையில் தேசிய நூலகம், கலாபவனம் மற்றும் மகாவலி கேந்திர நிலையம் என கலையம்சம் பொருந்திய கட்டிடங்கள் அமைந்துள்ள நிலையிலேயே அவரது பெயர் சூட்டப்பட்டது.
இப்போது இப்பாதைக்கு நெலும்பொக்குண மாவத்தை எனப் பெயர் மாற்றியதன் மூலம்  அவரை அகௌரவப்படுத்தியுள்ளனர். தெற்காசிய கலைகளை, பௌத்த கலாசாரங்களை உலகுக்கு தெரியப்படுத்திய சுவாமி ஆனந்த குமாரசுவாமியின் பெயரை மீண்டும் அவ்வீதிக்கு இடுவதற்கு மாகாண சபை உத்தரவிட வேண்டுமெனத் தெரிவித்தார்.
இதன் பின்னர் ஆளும் கட்சி பிரதம கொறடா ரேணுகா பெரேரா பேசுகையில்;
முஜிபுர் ரகுமான் இடதுசாரிக் கட்சியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு வந்தவர். அவர் ஏன் இனவாதியாக மாறினாரெனத் தெரியவில்லை. நாங்கள் பாதையின் பெயரை மாற்றவில்லை. அந்த நீண்ட வீதியின் ஒரு பகுதியை மட்டுமே நெலும் பொக்கிண மாவத்தையென மாற்றியுள்ளோம். சீனா இந்தக் கலைக்கூடத்தை பல கோடி ரூபா செலவளித்து கட்டியதைக் கௌரவப்படுத்துவதற்கே பாதைக்கு நெலும் பொக்குணவென பெயரிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதன்போது ஜனநாயக மக்கள் முன்னணியின் சபையின் குழுத்தலைவர் குமரகுருபரன் இங்கு பேசுகையில்;
சபையில் கலாயோகி ஆனந்த குமாரசாமியின் பெயரை உச்சரித்த போது, இனவாதியென உறுப்பினர்களிடையே வாக்குவாதம் இடம்பெற்றது. இது மிகவும் கவலையளிக்கின்றது. அன்று கலாயோகி ஆனந்த குமாரசாமியை கௌரவப்படுத்தி அரசாங்கம் முத்திரை வெளியிட்டது. அத்துடன் தெற்காசிய கலைகளை உலகுக்கு எடுத்துக்காட்டியதற்காக அந்த வீதிக்கு அவரது பெயரைச் சூட்டிப் பெருமைப்படுத்தியது. தற்போது அவ்வீதியின் அரைவாசிக்கு நெலும் பொக்குண என பெயர் மாற்றியதன் மூலம் பாதையில் அரைவாசியைப் பறித்தெடுத்துள்ளனர். இது அவரை அகௌரவப்படுத்தும் செயலாகுமென்றார்.
இதையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 12 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் கிடைத்ததால் பிரேரணை 24 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

24 ஏப்ரல் 2012

படைபலம் கொண்டு தமிழ் மக்கள் அடக்கப்படுகின்றனர்!

vickramabahu_karunaratneபோருக்குப் பின்னரும் இந்த அரசு தமிழ் மக்களை பெரும் படை பலத்துடன் அடக்கி  வருகின்றது. இதனைத் தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டிய  கட்டாய தேவையாகும் என நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். மே தினக் கூட்டம் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ;
எதிர்வரும் மே தினக் கூட்டம் நவசமசமாஜக் கட்சி ஒன்றில் கொழும்பில் தனியாக நடத்தும் அல்லது வேறு இடதுசாரி அரசியல் , தொழில் சங்க அமைப்புகளுடன் கை கோர்த்து நடத்தும்.
யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ள இணைந்த  எதிரணிக் கட்சிகளின் மே தினக் கூட்டத்திலும் நவசம சமாஜக்கட்சி பங்குகொள்ளும் இதன் காரணமாக சில அரசியல் வட்டாரங்களில் இருந்து விமர்சனங்களும் கண்டனங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதை ஊடகங்களின் மூலம் அறிய முடிகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் யாழ்ப்பாணத்தில்  நடத்தப்படவுள்ள மே தினக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பல கட்சிகள் பங்கு கொள்ள இருக்கின்றன. மேற்படி  பிரதான இரு கட்சிகளினதும் கொள்கைகளுக்கும் நவசம சமாஜக்கட்சியினதும் கொள்கைகளுக்கும் பாரிய வேறுபாடு உள்ளது.
இது யாவருக்கும் தெரிந்த உண்மை நிலையாகும். குறிப்பாக தமிழ்த் தேசியப் பிரச்சினையை பொறுத்த வரை தமிழ் மக்களினது சுயநிர்ணய உ ரிமை அவர்களின் தாயகம் ஆகியவற்றை பொறுத்த வரை நவசம சமாஜக் கட்சி அவற்றை அங்கீகரிப்பதுடன் அதற்காக கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக போராடியும் வருகின்றது.
இதே நேரம் இன்றைய கால கட்டத்தில் போருக்கு பின்னரான காலப் பகுதியில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தமிழ் மக்களை பெரியளவில் படைபலத்துடன் ஒடுக்கி வருகின்றது. எனவே இத்தகைய கொடிய ஒடுக்கு முறை செயற்பாட்டுக்கு எதிராக  அனைத்து எதிர் சக்திகளையும் ஒன்றிணைத்து போராட்டங்களை  முன்னெடுக்க வேண்டியது  காலத்தின் தேவையாகும். இந்த அடிப்படையிலேயே   யாழ்ப்பாணத்தில் மே தினத்தை நடத்துவது தொடர்பாக நவசம சமாஜக் கட்சி  எண்ணுகின்றது.
மாறாக மேற்படி இரண்டு கட்சிகளுடனும் வேறு எந்த வகையான விலை போதல் செயற்பாடுகளுக்கும் நவசமசமாஜக்  கட்சி ஒரு போதும் வளைந்து கொடுக்க மாட்டாது. அங்ஙனம் எவரும் எண்ணுவார்களாயின் அவர்களின் அரசியல் ஞானம் பெரிதாக வளர்ச்சி பெறவில்லை என்றே நவசம சமாஜக் கட்சி கருதுகின்றது.
போராட்டங்களின் ஊடாகவே இந்த ஆட்சியை பலவீனப்படுத்த முடியும். அதனையே நவசம சமாஜக் கட்சி மேற்கொண்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட இருக்கின்ற  மே தினத்தை ஒரு போராட்ட வடிவமாகவே நவசம சமாஜக் கட்சி  பார்க்கின்றது. எத்தகைய போராட்ட செயற்பாடுகளும் இன்றி வெறும்  விமர்சனங்களை முன்வைப்பதாலும் ஆட்சியாளர்களே பயன்பெறுவர். கடந்த 60 வருடங்களுக்கு மேலாக வைரம் பாய்ந்து உறுதியாக இருக்கும் தமிழ்த் தேசிய உணர்வு கரைந்து போய் விடுமென யாரும் நினைத்தால் அது சொல்கின்றவரின் பலவீனத்தின் வெளிப்பாடு என்றே அடையாளம் காண முடியும்.
நீண்ட வரலாற்றைக் கொண்ட தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த யாரும் அருகில் நெருங்க முடியாது இன்றைய கால கட்டத்தில் போராட்ட வடிவங்கள்  ஊடாகவே தமிழ் மக்களின் விடுதலைப் பேராட்டத்தை முன்கொண்டு செல்ல  முடியும் இதுவே நவசம சமாஜக் கட்சியின் நம்பிக்கையாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

23 ஏப்ரல் 2012

முற்போக்கு சோசலிச கட்சிக்குள்ளும் பிளவு!

ஜே.வி.பியிலிருந்து விலகிச்சென்ற குழுவொன்றினால் ஆரம்பிக்கப்பட்ட முற்போக்கு  சோசலிச கட்சிக்குள்ளும் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுத்து பண்டார அபேயகோனின் தலைமையிலான ஒரு குழுவும், சேனாதீர குணதிலக்க எனப்படும் மீபான மஹாத்தயா என்பவரின் தலைமையிலும் இரு குழுக்கள் தோற்றியுள்ளதைத் தொடர்ந்து இவர்களுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, முற்போக்கு சோசலிச கட்சியில் அங்கம் வகிக்கும் மக்கள் போராட்ட இயக்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் கெலும் அமரசிங்கவும் தமது பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். அவர் தற்போது, கட்சியுடன் உள்ளக ரீதியான விவாதத்தில் ஈடுபட்டு வருவதாக கட்சித் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவினால் திணிக்கப்பட்டதே 13வது திருத்தம் என்கிறார் தேரர்!

அரசியலமைப்பின் 13 வது திருத்தம் என்பது இந்தியாவினால் இலங்கை மீது பலவந்தமாக திணிக்கப்பட்ட தேவையற்ற சுமையாகும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் குற்றம்சுமத்தியுள்ளார். 
மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டியதில்லை. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை முன்மொழிவுகள் தொடர்பில் கூட்டணி கட்சிகளின் கருத்துக்களை கோரும் ஜனாதிபதியின் முயற்சி வரவேற்கப்பட வேண்டியது. 
ஜாதிக ஹெல உறுமய கட்சி 13 பிளஸ், 13 க்கு அப்பால் அல்லது 13 மைனஸிற்கு ஆதரவளிக்காது.. தமிழ் மக்களுக்கு 13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென்ற தேவை கிடையாது. 
இன ரீதியாக, மத ரீதியாக, பிரதேச ரீதியாக பிளவடைந்து வாழ வேண்டுமென பொதுமக்கள் கருதவில்லை. தமிழ் மக்கள் அமைதியான முறையில் வாழ்வதற்கே விரும்புகின்றனர் என ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.  

22 ஏப்ரல் 2012

மீண்டும் இலங்கை வருவேன் என்கிறார் குமார்!

kumar2(8)தன்னை நாடுகடத்தியதன் மூலம் மக்களிடமிருந்து தன்னை விலக்குவதற்கு முதலாளித்துவ ஆட்சியாளர்கள் முயற்சித்தாலும் இம்மக்களுக்கு அரசியல் ரீதியாக சேவையாற்றுவதை தடுக்க முடியாது என அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்ட, முன்னிலை சோஷலிஸக் கட்சியின் தலைவர் குமார் குணரட்ணம் கூறியுள்ளார்.
தமிழ் மிரரின் சகோதர ஆங்கில இதழான டெய்லி மிரருக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
உங்கள் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு திரும்பிவர முயற்சிக்கிறீர்களா என வினவப்பட்டபோது
‘நாம் மார்க்ஷிஸம், லெனினிஷஸம் ஆகியவற்றை பின்பற்றுபவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நாம் பணியாற்றுகிறோம். உலகில் எந்த பாகத்திலிருந்தாலும் நாம் அவர்களுக்காக பணியாற்றலாம் அவர்களின்  மொழி, நாடு, இன அடையாளங்கள் எம்மை பாதிக்காது. ஆனாலும் இலங்கையிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பணியாற்றுவதில் நான் அதிக ஆர்வம் கொண்டுள்ளேன்.
என்னை நாடுகடத்தியதன் மூலம் மக்களிடமிருந்து தன்னை விலக்குவதற்கு முதலாளித்துவ ஆட்சியாளர்கள் முயற்சித்தாலும் இம்மக்களுக்கு அரசியல் ரீதியாக சேவையாற்றுவதை தடுக்க அவர்களால் முடியாது. தற்போதைய ஜனநாயக விரோத போக்கில் மாற்றமொன்றை ஏற்படுத்திய பின்னர் நிச்சயமாக நான் இலங்கை மக்களுக்காக சேவையாற்ற வருவேன்’ என அவர் பதிலளித்தார்.
குமார் குணரட்ணத்திடம் கேட்கப்பட்ட மேலும் சில கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் பின்வருமாறு:
கேள்வி: நீங்களும் திமுது ஆட்டிகலவும் கடத்தப்பட்டமை தொடர்பாக வதந்திகள் உள்ளன. பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் அரசியல் லாபங்களுக்காவும் நீங்களாகவே காணாமல்  சிலர் கூறுகிறார்கள். உங்கள் பதில் என்ன?
பதில்:இந்த நடவடிக்கை அரசாங்கத்தின் ஜனநாயக விரோத பாதையை காட்டுகிறது. நாம் ஆயுதகுழுவொன்றின் மூலம் கடத்தப்பட்டோம். எனினும் பொலிஸாருக்கூடாக விடுவிக்கப்பட்டோம். இந்த நாடகத்தை யார் நடத்துகிறார்கள் என்பது வெளிப்படை. நாம் இழிவான விடயங்களை செய்வதில்லை. எமக்கு முன்னாலுள்ள அரசியல் சவால் குறித்து எமக்கு ஆழமான அரசியல் அறிவு உள்ளது. அந்த சவாலை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்.
கேள்வி: நீங்கள் பாலியல் ரீதியாக சித்திரவதை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தினீர்கள். இதற்காக நீதி தேடி சர்வதேச அமைப்பொன்றிடம் செல்லும் யோசனை உங்களிடம் உள்ளதா? அப்படியானால் முதலில் என்ன செய்வீர்கள்?
பதில்: ஆட்சியாளர்கள் எனது வாழ்க்கையை அழிக்க விரும்பினார்கள். எமது அரசியல், நெறிமுறையை  அழிக்கவும் அவர்கள் முயற்சித்தார்கள். எனக்கு இழைக்கப்பட் அநீதி குறித்த விடயத்தை  உலகெங்கும் உள்ள முற்போக்கு சக்திகளிடம் கொண்டு செல்வேன். ஆனால் முதலாளித்துவ முறைமையின் கீழ் இயங்கும் எந்த நீதிமன்ற அமைப்பிற்கும் நான் செல்லப்போவதில்லை.
கேள்வி: குடிவரவு, குடியகல்வு சட்டத்தை நீங்கள் மீறியதாக குற்றம்சுமத்தப்படுகிறது. இது தொடர்பாக இங்கு அல்லது நீங்கள் தங்கியிருக்கும் அவுஸ்திரேலியாவில் ஏதாவது விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறீர்களா?
பதில்: முதலாளித்துவ சட்டத்தின்கீழ்கூட உயிர்வாழ்வதற்கான உரிமையானது ஏனைய எல்லாவற்றையும்விட மேலானதாக உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய ஜனநாயக விரோத ஆட்சியில் அந்த உரிமை ஆபத்துக்குள்ளாகி உள்ளது. இலங்கையில் ஊடகத்துறைக்கு என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உயிருக்குப் பயந்த ஊடகவியலாளர்கள் சிலர் தலைமறைவாகியுள்ளனர். வேறு சிலர் தமது அடையாளங்களை மறைக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இந்நிலைமை ஊடகத்துறைக்கும் அரசியலுக்கும் பொதுவானது.
இலங்கையிலோ வெளிநாட்டிலோ எந்த நீதிமன்றத்திலும் ஆஜராக நான் தயார். அத்துடன் மக்களிடம் சென்று எனது பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கவும் நான் தயார். சில வருடங்களுக்கு முன்னர் கருணா அம்மானுக்காக குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி அரசாங்கம் போலி கடவுச்சீட்டொன்றை பயன்படுத்தியது. அவரை நீதிமன்றம் முன் நிறுத்துமாறு அரசாங்கம் கோரப்பட வேண்டும். அரசாங்கத்திற்கு ஒரு சட்டம், எதிர்க்கட்சிக்கு வேறு ஒரு சட்டம் இருக்க முடியாது.
கேள்வி: நீங்கள் கடத்தப்பட்டு, பின்னர் பொரளையிலுள்ள கொழும்பு குற்றப் பணியகத்திற்கு அனுப்பப்பட்டவுடன் அங்கு உங்கள் கடவுச்சீட்டை கொண்டுவர அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்திற்கு எப்படி முடிந்தது?
பதில்: இவை அபத்தாமான குற்றச்சாட்டுகள். எனது கடத்தலின் பின்னர், காணாமல் போன அவுஸ்திரேலிய பிரஜையின் கடவுச்சீட்டு விபரங்களை அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகாரிடம் பாதுகாப்புச் செயலாளர் கோரியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த செய்திகளை பார்த்த எமது கட்சியின் சக செயற்பாட்டாளர்கள், அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்திடம் எனது கடவுச்சீட்டை ஒப்படைத்தனர். அனைத்து ஆவணங்களையும் எனது கட்சி அங்கத்தவர்களிடம் கொடுத்திருந்தேன். அதில் மறைப்பதற்கு எதுவுமில்லை.

21 ஏப்ரல் 2012

ஐ.நா.தூதராக எரிக் சொல்கைம்?

நோர்வேயில் அண்மையில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின்போது, பதவியிழந்த சிறிலங்காவுக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீவிர அரசியலில் இருந்து விலகி, இராஜதந்திரப் பணியில் இணைந்து கொள்ளும் நோக்கில் அவர் முக்கியத்துவம் மிக்க ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்குப் போட்டியில் குதித்துள்ளார்.
நியுயோர்க்கில் ஐ.நாவுக்கான நோர்வேயின் தூதுவராகப் பணியாற்றும் மோர்டென் வெற்லன்ட் நான்கு ஆண்டு பதவிக்காலத்தை முடித்து ஒஸ்லோ திரும்பவுள்ளார்.
ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்கு எரிக் சொல்ஹெய்முடன் மேலும் மூவர் போட்டியில் உள்ளனர்.
எனினும் இந்தப் பதவிக்கு எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில், நியுயோர்க்கில் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் நிலையில், போர்க்குற்றம் சாட்டப்படும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா பணியாற்றுகின்ற நிலையில், எரிக் சொல்ஹெய்ம் அவருக்குத் தலைவலி கொடுக்கலாம் என்று சிறிலங்கா கலக்கமடைந்துள்ளது.
ஐ.நாவுக்கான தூதுவராக எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டால், அது சிறிலங்காவுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று சிறிலங்கா அரசதரப்பு எதிர்பார்க்கிறது.
சிறிலங்காவுக்கு எதிராக, அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றுநோர்வே பகிரங்கமாகவே வலியுறுத்தி வருகிறது.
சில காலங்களுக்கு முன்னர் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்தபோது, எரிக் சொல்ஹெய்ம் கூட இதையே வலியுறுத்தியிருந்தார்.
இவ்வாறான ஒருவர் ஐ.நாவில் உயர் பதவியைப் பெறுவது தமக்கு நெருக்கடியாக அமையும் என்று, சிறிலங்கா அரசதரப்பு கலக்கமடைந்துள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

20 ஏப்ரல் 2012

இந்தியக்குழு உல்லாசப் பயணமே மேற்கொண்டுள்ளது!


வழமையாக இலங்கைத் தமிழர்களை ஏமாற்றும் இந்தியாவின் கபட நாடகம் ஒன்று மீண்டும் அரங்கேற்றப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் சுற்றுலாப் பயணம் செய்யும் இந்தியாவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு ஆதிவாசிகளைப் பார்ப்பது போலவே இலங்கைத் தமிழர்களைப் பார்வையிட்டுச் சென்றுள்ளது."
இவ்வாறு கூறியுள்ளார் இலங்கை நவ சமசமாஜக் கட்சியின் தலைவரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னா.
இலங்கையில் தற்போது சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை தொடர்பாகவும் அவர்களது நோக்கம் தொடர்பாகவும் கடுமையான விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ள அவர் மேலும் கூறுகையில் "தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கவேண்டும் என்று ஆணித்தரமாகவும் அழுத்தமாகவும் இலங்கை அரசிற்கு தெரிவிக்காத இந்திய பாராளுமன்ற குழுவின் விஜயமானது வெறும் உல்லாசப் பயணமாகும்.
யுத்தம் முடிந்து 3 வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீண்டும் சென்று குடியேற முடியாத நிலையிலேயே இராணுவம் தடையாக உள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் கண்டும் காணாதவர்களாக இலங்கைக்குள் சுற்றுப் பயணம் செய்யும் மேற்படி இந்தியக் குழு, அழுத்தமாக எதையும் கூறாமல் அதிகாரத்தை பரவலாக்குங்கள், மக்களை மீள குடியேற்றுங்கள் என்றெல்லாம் "பம்மாத்து" காட்டுகின்றது. தற்போது தலையாடடும் இலங்கை அரசு எதிர்காலத்தில் எதையும் செய்யாது என்;பதே உண்மை. எனவே ஏமாற்றப்படப் போகின்றவர்கள் தமிழ் மக்களே" இவ்வாறு கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னா தெரிவித்துள்ளார்.

கடத்திச் செல்லப்பட்டுள்ள லலித், குகன் குறித்து திடுக்கிடும் தகவல்கள்!

 
Lalith_kuganகடத்திச் சென்று தடுத்துவைக்கப்பட்டு, மரணத் தருவாயில் உள்ள மக்கள் எழுச்சிய இயக்கத்தின் செயல்பாட்டாளர்களான லலித், குகன் ஆகியோர் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 12ஆம் திகதி இரவு முதல் தெமட்டகொடவிலுள்ள கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த லலித், குகன் ஆகியோர் நேற்று (19) அதிகாலை 2.20 அளவில் அந்த இடத்திலிருந்து மற்றுமொரு இடத்திற்கு மாற்றப்பட்டதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் பொலிஸ் நலன்புரி தலைமையகக் கட்டத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கடந்த 12ஆம் திகதி எமது இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதனையடுத்து அன்றிரவே இவர்கள் இருவரும் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவின் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டனர். இந்தத் தகவல் அன்றைய தினமே எமக்குக் கிடைத்த போதிலும் அவர்களுக்கு ஏற்படக் கூடிய உயிர் அச்சுறுத்தலைத் தவிர்ப்பதற்காக அந்தத் தகவல்களை நாம் உடனடியாக வெளியிடுவதைத் தவிர்த்துக் கொண்டோம்.
எனினும், நேற்று அதிகாலை AA-C026 என்ற இலக்கத் தகட்டைக் கொண்ட வெள்ளை நிற லென்ரோவ் ஜீப் வாகனத்திலும், இருபுறமும் கறுப்புக் கண்ணாடிகளினால் மறைக்கப்பட்ட டொயட்டா ரக வாகனத்திலும் இவர்கள் இருவரும் அந்த இடத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
”இந்த இரண்டு வாகனங்களும் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்திற்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், அந்த அலுவலகத்திற்கான மின் இணைப்பு முழுமையாக துண்டிக்கப்பட்டிருந்தது. அத்துடன், குறித்த அலுவலகத்திற்கு அண்மித்த வீதியில் அமைக்கப்பட்டிருந்த பெட்டிக் கடையில் நின்றுகொண்டிருந்தவர்களும் அங்கிருந்து அப்புறுப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு வாகனங்களும் வந்த நொடிப்பொழுதில், தலை முதல் கால் வரை முழுமையாக துணியினால் மறைக்கப்பட்ட வண்ணம் லலித், குகன் ஆகிய இருவரும் இந்த வாகனத்தில் ஏற்றப்பட்டு வேறு இடடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
குறிப்பாக இவ்வாறு கடத்தப்பட்டு அங்கு கொண்டுவருபர்களின் கண்கள் மட்டுமே வழமையாக கட்டப்பட்டிருக்கும் என்ற போதிலும், லலித், குகன் ஆகியோர் தலை முதல் கால் வரை மறைக்கப்பட்டிருந்தனர். அலுவலகத்திலுள்ள வேறு எவரும் அடையாளம் காணாத வகையிலேயே இவ்வாறு முழுமையாக மறைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு வாகனத்தில் ஏற்றப்பட்டவர்களில் ஒருவர் நீள்காற்சட்டடை அணிந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. மற்றைய நபரின் பாதம் வரை முழுமையாக மறைக்கப்பட்டிருந்தது. இவர்கள் இருவரும் மிகவும் சிரமப்பட்டே நடந்துசென்றனர்” என அந்த நம்பகரமான தகவல்கள் தெரிவித்தன.
லலித், குகன் ஆகிய இரவரும் பொலிஸ் நலன்புரி தலைமையகக் கட்டடத் தொகுதியில் தடுத்து வைக்கப்படவில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரொஹன எனப்படும் ‘சாப்பாட்டு ராமன்” ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
இந்த தகவல் ஏப்ரல் 12ஆம் திகதி இரவின் பின்னரே உண்மையானது. காரணம் அன்றைய தினம் இரவே லலித், குகன் ஆகியோர் அங்கிருந்து வேறொரு இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
லலித், குகன் ஆகிய இருவரும் நேற்று (19) காலை வரை உயிருடன் இருந்தனர் என்பதை நாம் மிகவும் பொறுப்புடனும், உறுதியுடனும் கூறிக்கொள்கிறோம். அத்துடன், அந்த உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு உடனடியாக தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனநாயக விரும்பிகளையும், மனித உரிமை ஆர்வலர்களையும், மனித நேயம் படைத்தவர்களையும் உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி:சரிதம்