02 ஏப்ரல் 2011

சிறைக்குள் உளறும் சரத் பொன்சேகா.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஸ்ரீலங்கா அணி பெறவுள்ள வெற்றி விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பெற்ற வெற்றிக்கு ஒப்பானது என்று ஸ்ரீலங்காவின் முன்னாள் படைத்தளபதியும் தமிழின அழிப்பின் முக்கிய பங்காளியுமான சரத் பொன்சேகா கூறியுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சரத் பொன்சேகா,ஸ்ரீலங்கா அணி கிண்ணத்தைக் கைப்பற்றும் என்று உறுதியாக நம்புகிறார் என்றும் தெரிவித்தார். "தற்போதைய சமூக, அரசியல், பொருளாதார, பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இலங்கை அணியினர் உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டுமென நாம் வாழ்த்துகிறோம்'' எனப் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக