21 ஏப்ரல் 2011

போராட்டத்திற்கு தயாராகுமாறு பிரதமர் உருத்திரகுமாரன் வேண்டுகோள்!

மே மாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையான கால பகுதியை துக்கத்தினங்களாக அனுஷ்டிக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் மே மாதம் 19 ஆம் திகதி ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தயாராகுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை ருத்ரகுமாரன் தலைமையிலான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்கள், நிபுணர்கள் குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போர் குற்ற விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு பாரிய அழுத்தங்களை கொடுக்க முயற்சித்து வருவதாக பிரித்தானியாவில் இயங்கும் சிங்கள அமைப்பான பயங்கரவாதத்திற்கு எதிரான ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக