19 ஏப்ரல் 2011

பாதுகாப்பு பேரவையில் நிபுணர் குழு அறிக்கை!

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை அந்த அமைப்பின் பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்கப்பட உள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் சிரேஸ்ட அரசியல் விவகார அதிகாரி லியன் பெஸ்கோவை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை கட்டார் மற்றும் எகிப்து விவகாரங்கள் குறித்து பாதுகாப்புப் பேரவையில் விவாதம் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
2009ம் ஆண்டில் கொஸ்டரிக்கா மற்றும் மெக்ஸிக்கோ ஆகிய நாடுகள் இலங்கைக்கு எதிராக பாதுகாப்புப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்த போது சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.
எவ்வாறெனினும், 2011ம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையில் இலங்கை விவகாரம் விவாதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகக் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக