21 ஏப்ரல் 2011

புலிகள் மருத்துவ மனைகளை தமது தேவைக்கு பயன்படுத்தவில்லை!

இறுதி நேரம்வரை விடுதலைப்புலிகள் வைத்தியசாலைகளை தமது தேவைக்காக பாவிக்கவில்லை என நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 தை மாதம் தொடக்கமே இலங்கை அரசு படைகள் வைத்தியசாலைகளை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்த வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்களை கோத்தபாய புலிகளின் இராணுவ இலக்கு என குறிப்பிட்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் தாக்குதல் நடந்தது உண்மை ஆனால் புலிகள்தான் அங்கு இருந்தார்கள் எனவும் அங்கு பொதுமக்களோ நோயாளர்களோ இருக்கவில்லை எனவும் கூறியிருந்தார். தைமாதம் முல்லைத்தீவு வைத்தியசாலை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் வீடியோ ஆதாரங்கள், மற்றும் கண்கண்ட சாட்சிகளால சர்வதேச செஞ்சிலுவை சங்க பணியாளர்கள் உள்ளார்கள் .
இந்த நிலையில் வைத்தியசாலை மீதான தாக்குதல்கள் பக்கசார்பின்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நிபுணர் குழு அறிக்கை கூறியுள்ளது. இதே வேளை விடுதலைப்புலிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். ஆனால் இறுதிவரை அவர்கள் இராணுவ தேவைக்கு வைத்தியசாலைகளை பாவிக்கவில்லை எனவும் கூறியுள்ளது நிபுணர் குழு அறிக்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக