22 ஏப்ரல் 2011

ஸ்ரீலங்காவின் கோரிக்கையை நிராகரித்து,அறிக்கையை வெளியிட உள்ளது ஐ.நா.

ஐ.நா.நிபுணர் குழுவின் இலங்கை தொடர்பான முழுமையான அறிக்கையை உத்தியோகப்பூர்வமாக வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டாம் என ஸ்ரீலங்கா அரசாங்கம் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற போதிலும், அதனை தாம் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளாது முழுமையாக வெளியிட எண்ணியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரது பதில் பிரதி ஊடகப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பான ஸ்ரீலங்கா அரசின் நிலைப்பாட்டை, குறித்த அறிக்கையில் சேர்த்துக் கொள்வது தொடர்பாக ஸ்ரீலங்கா அரச அதிகாரிகளுடன் தாம் கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ-மூனின் நிபுணர் குழு அறிக்கையை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இதனால் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக தாம் எவ்வித கருத்துக்களையும் முன்வைக்க போதில்லை என அவர் உறுதியளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக