27 ஏப்ரல் 2011

ஐ.நா.அலுவலர்களை ஸ்ரீலங்கா அரசு துப்பாக்கி முனையில் மிரட்டியதா?

போரின் இறுதிக்கட்டத்தில் இடம் பெற்ற மனிதப் படுகொலைகள் வெளித்தெரியவராது ஐநா அலுவலர்களை இலங்கை அரசாங்கம் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதா என இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமைதியாக ஐநா செயலாளர் நாயகம் அளிக்கை செய்த பின்னர் இன்னர் சிற்றி பிரஸ் பான் கீ மூனிடம் இரண்டு பிரதானமான கேள்விகளை எழுப்பியது.
பான் அளித்த பதில்களில் தொக்கி நிற்பது என்வென்றால் இலங்கையின் இறுதிப் போரின் போது பாதிக்கப்பட்டவர்கள் படுகொலையானவர்கள் பற்றிய விபரங்களை ஐநா மறைத்துள்ளது என்பது தான்.
பொதுமக்களைப் பாதுகாக்க ஐநா தவறி விட்டது என்றும், உண்மையில் பாதிக்கப்பட்டவர்களது விபரங்களை திரட்டுவதிலும் வெளியிடுவதிலும் அது தவறிவிட்டது என்றும், நிபுணர் குழு அறிக்கை முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்து பான் கீ முனிடம் கேட்ட போது அவ்வாறு செயற்பட்டால் 'ஐநா அலுவலர்களின் பாதுகாப்புக்கு தம்மால் உத்தரவாதம் தர முடியாது' என இலங்கை அதிகாரிகள் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
'மோதலின் இறுதிக்கட்டத்தில் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தைப் பெற முடியாதிருந்தது. ஐநாவின் குழுவுக்கு அங்கே எத்தகைய பாதுகாப்பையும் அபாயமற்ற நிலையையும் இலங்கை அரசால் உறுதிப்படுத்த முடியாது என இலங்கை அரசாங்கத்தால் எங்களுக்குச் சொல்லப்பட்டதாகவே எனக்கு ஞாபகம் இருக்கிறது' என பான் கீ மூன் தெரிவித்திருந்தார்.
இதனுடைய சாரம் என்னவென்றால் ராஜபக்சக்கள் துப்பாக்கி முனையில் ஐநா அலுவலர்களை வைத்திருந்ததால், அப்போது அங்கு எவ்வளவு மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதனை ஐநா மறைத்தது. அந்நேரத்தில் தாம் படுகொலை தொடர்பில் கணக்கெடுப்பொன்றைச் செய்து கொண்டிருப்பதாக ஐநாவின் ஊதுகுழல்கள் இன்னர் சிற்றி பிரஸிடம் தெரிவித்திருந்தன. பின்னர் இன்னர் சிற்றி பிரஸ் படுகொலைகள் தொடர்பான விபரங்களை வெளியிட்ட போதும் ஐநா அதனை உறுதிப்படுத்த மறுத்து விட்டது.
வெள்ளைக் கொடி விவகாரப் படுகொலையில் விஜய் நம்பியாரின் பங்கு பற்றி இன்னர் சிற்றி பிரஸ் பான் கீ மூனிடம் கேட்ட போது அக்கேள்விக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்த பான் கீ மூன் ஐநாவின் செயற்பாடுகள் தொடர்பில் தனது சிரேஸ்ட ஆலோசகர்களின் ஆலோசனையுடன் ஒரு மீள்பார்வை செய்ய இருப்பதாகத் தெரிவித்தார்.
கேள்வி என்வென்றால் அந்தச் சிரேஸ்ட ஆலோசகர் விஜய் நம்பியார் தானா? 'அந்நேரத்தில் இலங்கையில் ஐநா தூதுக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் பணிகள் தொடர்பாக ஒரு மீள் பார்வை செய்யவுள்ளேன். இது தொடர்பில் நான் எனது சிரேஸ்ட ஆலோசகர்களுடன் கலந்துரையாட உள்ளேன்' எனப் பான் கீ மூன் தெரிவித்தருந்தார்.
இலங்கையின் போர்க்குற்ற நிபுணர் குழுவின் அறிக்கையுடன் இணைக்கப் பட்டிருந்த பான் கீ மூனின் கடிதத்தில் விசாரணைக்கான பொறிமுறை சம்பந்தப்பட்ட நாட்டின் ஆதரவுடன் அல்லது உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் உருவாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கியது யார் எனக் கேட்டதுடன் பான் மூன்று முறை நிபுணர் குழு இலங்கைக்குச் செல்லும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இறுதிவரை செல்லவேயில்லையே ஏன் என்றும் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வியெழுப்பியது.
தனக்கு ஆலோசனை வழங்கியது யார் என்று பான் கீ மூன் சொல்லவில்லை. உறுப்புநாடுகளால் வாக்களிப்பினூடாக மேற்கொள்ளப்படும் தீர்மானத்தை தான் வரவேற்பதாகத் தெரிவித்தார்.
நிபுணர் குழுவின் இலங்கை விஜயத்திற்கு இலங்கை அரசை ஒத்துக்கொள்ள வைக்க நாம் பெரிதும் முயன்றோம். ஆனால் அவர்கள் நிபுணர் குழுவை அனுமதிக்கத் தயாராக இருக்கவில்லை. இறுதியாக அவர்கள் தமது உயரதிகாரிள் சிலர் நிபுணர்குழுவை வந்து சந்திக்க அனுமதித்தனர். அந்த அடிப்படையில் மோஹபன் பீரிஸ்உடன் சந்திப்பு நடைபெற்றது என்றார்.
இச்சந்திப்புக் குறித்து முன்னர் ஐநா மறுத்து வந்தது. ஆனால் இப்போது ஒத்துக் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக