20 ஏப்ரல் 2011

ஐ.நாவுக்கு எதிர்ப்பை வெளிக்காட்டுமாறு சமயத்தலைவர்களை நிர்ப்பந்திக்கிறது ஸ்ரீலங்கா!

ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக கடும் கண்டணத்தையும் எதிர்ப்பையும் வெளியிடுமாறு சகல சமயத் தலைவர்களையும் அரசாங்கம் பலவந்தப்படுத்தி வருவதாக தெரியவருகிறது.
நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்குடன் ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கைக்கு ஒட்டுமொத்த கண்டனத்தை சமயத் தலைவர்கள் வெளிப்படுத்த வேண்டும் எனவும் பெளத்த சிங்கள பேரினவாத அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.பௌத்த, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சமயங்களைச் சேர்ந்த தலைவர்களிடம் இந்த விண்ணப்பத்தை அரசாங்கம் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.ஐ.நாவைக் கண்டிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணிகளிலும் கலந்து கொள்ளுமாறும் சமயத் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக