28 ஏப்ரல் 2011

நிபுணர் குழு பரிந்துரைகளை ஸ்ரீலங்கா ஏற்று நடக்கவேண்டும்.

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையை தாம் ஆதரிப்பதாகவும், சிறீலங்கா அரசு அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரித்தானியா வெளிவிவகார அமைச்சகம் இன்று (28) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:
சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நாவின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கை வரவேற்கத்தக்கது. சிறீலங்காவில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் தேவை என பிரித்தானியா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.
எனவே நாம் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிபுணர் குழுவின் அறிக்கைக்கும் முழுமையான ஆதரவுகளை வழங்குவோம். நீதியான, சுயாதீன விசாரணைகள் தேவை என்பதை அறிக்கை வலியுறுத்தியுள்ளது. சிறீலங்கா அரசு அதனை ஏற்றுக்கொண்டு, பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
சிறீலங்காவில் இனநல்லிணக்கப்பாடுகன் ஏற்படுவதற்கு நீதியான விசாரணைகள் அவசியம் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக