29 ஏப்ரல் 2011

உலகிலேயே மிகவும் ஒழுக்கமானவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.

தமிழீழ விடுதலைப்புலிகளைச் சுதந்திரப் போராளிகள் என்றும் ஒழுக்கமான போராளிகளைக்கொண்ட கட்டமைப்பாக இருந்தார்கள் என்றும் தெரிவித்துள்ள ஐ.நா. நிபுணர் குழுவின் தருஸ்மன் அறிக்கையை நாம் எப்படி ஏற்றுக்கொள்வது? இப்படி காடைத்தனத்திற்கு பெயர் பெற்ற சிங்கள அரசின் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று கேள்வி எழுப்பினார்.
அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை தகவல் திணைக்களக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தொடர்பான அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சிங்கள் அமைச்சர் ஒருவர் பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
நிபுணர் குழுவின் அறிக்கையின் 8ஆம் பக்கத்தில் புலிகள் சுதந்திரப் போராளிகள், உலகிலேயே மிக ஒழுக்கமானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட அறிக்கையை தமது அரசு ஏற்காது என மற்றுமொறு பேட்டியில் பீரிஸ் கூறியுள்ளார்.
மேலும் அறிக்கைய ஏற்காததால் போராட்டங்கள் எதுவும் தீவிரமாக நடத்தப்போவதில்லை எனவும் தெரிவித்தார். ஆனால் புலனாய்வு அறிக்கையே போராட்டம் நடத்தினால் அரசு நினைக்கும் அளவு வெற்றிபெறாது என தெரிவித்துள்தாலேயே வீரியமான போராட்டங்கள் இல்லையென பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக