26 ஏப்ரல் 2011

படு பயங்கரமான வீடியோ காட்சிகளை சனல் போர் வெளியிடவுள்ளது!

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் தொடர்பிலான புலனாய்வில் இதுவரையில் காட்டப்பட்டவற்றைவிட மிக மிகப் பயங்கரமான வீடியோக் காட்சிகளை சனல் 4தொலைக்காட்சி ஒளிபரப்பவுள்ளதாக ஐக்கிய இராச்சிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2009ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தின் இறுதி வாரங்களில் இலங்கை படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்களை ஆராய்வது பற்றி பான் கீ மூன் அறிவித்ததற்கு அடுத்த நாள் சனல் 4 இந்த அறிவிதலை விடுத்துள்ளது. இதன்மூலம் நடந்த கொடூரங்கள் ஆவணப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
இந்த வீடியோக் காட்சிகள் படு பயங்கரமானவை என்பதால் இவை பின் இரவிலேயே ஒளிபரப்பப்படும். படு பயங்கரமான காட்சிகள் காட்டப்படுமுன் உரிய எச்சரிக்கை வழங்கப்படும் என சனல் 4 அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக