06 ஏப்ரல் 2011

ஸ்ரீலங்கா விட்டுக்கொடுத்ததால் இந்தியா வெற்றி பெற்றது!!

மும்பையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி இந்தியாவிடம் தோல்வியடைந்தது. தோல்வியுடன் நாடுதிரும்பிய ஸ்ரீலங்கா அணியினருக்கு நேற்று முன்தினம் மாலை மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் விருந்தளித்தபோதே இவ்வாறு கூறியுள்ளார். இந்தியாவிலுள்ள 120 கோடி மக்களின் மகிழ்ச்சிக்காக இலங்கையிலுள்ள 02 கோடி மக்கள் உலகக் கிண்ணத்தை விட்டுக் கொடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எமது நாட்டின் மக்கள் இந்திய நண்பர்களுக்காக உலகக்கிண்ணத்தை விட்டுக்கொடுத்துப் பின்வாங்கினர் என்பதை இந்திய நண்பர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன். இலங்கை அணி பெருந்தன்மையுடன் தோல்வியடைந்ததாக இவ் விருந்தில் கூறிய அவர், இப் போட்டியில் வெற்றிபெறாத போதிலும் இறுதி ஆட்டத்திற்கு இலங்கை தகுதி பெற்றது மிகப் பெரிய விடயம் எனக் கூறியுள்ளார். அலரி மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கை ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ராஜபக்ச துடுப்பாட்ட வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக