26 ஏப்ரல் 2011

உறுப்பு நாடுகள் கோரிக்கை விடுத்தால் மட்டுமே விசாரணை என்கிறார் பான் கீ மூன்!

ஸ்ரீலங்காவில் நடைபெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உறுப்பு நாடுகள் கோரிக்கை விடுத்தால் மட்டுமே விசாரணைகள் நடத்தப்படும் என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நாடு அல்லது உறுப்பு நாடுகளின் இணக்கமின்றி குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகளை நடத்தப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கப்படையினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிபுணர் குழு தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக