16 ஏப்ரல் 2011

குமுறுகிறார் இனவாத அமைச்சர் திஸ்ச வித்தாரண!

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பரப்பி வரும் வதந்திகளை ஆதாரமாகக் கொண்டே ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா இனவாத அரசின் சிரேஷ்ட அமைச்சரான திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றம் புரிந்ததாகக் கூறி சர்வதேச நீதிமன்றிற்கு இலங்கையை அழைத்துச் செல்வதே ஐநா நிபுணர் குழு அறிக்கையின் ஒரு நோக்கமெனவும் இந்த சிங்கள அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார். இதனால் குறித்த அறிக்கையை தாம் முற்றாக புறக்கணிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக