23 ஏப்ரல் 2011

நிபுணர் குழு அறிக்கை இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது!

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என ஐ.நா தகவல்கள் தெரிவிக்கின்றன. நிபுணர்கள் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டாம் என இலங்கை விடுத்த வேண்டுகோளை ஐ.நா நிராகரித்துள்ளது. 195 பக்கங்களை கொண்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஐ.நா அதிகாரிகளால் அண்மையில் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை துணை நிரந்தரப் பிரதிநிதி சவேந்திர சில்வாவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் அறிக்கையின் பிரதிகள் ஐ.நா பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனை தவிர ஐ.நாவுடன் சம்பந்தப்பட்ட அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றுக்கும், போத்துக்கல் தூதுவருக்கும் அறிக்கையின் பிரதிகள் வழங்கப்பட்டிருந்தன. நிபுணர்கள் குழுவின் அறிக்கை நேற்று வெளியிடப்படவிருந்த போதிலும் பெரிய வெள்ளி என்பதால், அது இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக